10 செப்டம்பர் 2011

இமெல்டாவுடன் கே,பியின் சகோதரரையும் ஜெனீவாவிற்கு அனுப்பியுள்ளது ஸ்ரீலங்கா அரசு!

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமான மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் நடைபெறுகிறது என்றும், போரின் போது மக்கள் பாதிப்பின்றி மீட்கப்பட்டதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் பிரசாரங்களை மேற்கொள்வதற்காக ஜெனிவா செல்லும் யாழ். மாவட்ட அரச முகவர் இமெல்டா சுகுமாருடன் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாதனின் சகோதரரும், வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தலைவருமான எஸ்.தவரட்ணமும் ஜெனிவா செல்கிறார்.
அரசாங்கம் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்கிறது என்றும் துரிதமாக புனர்வாழ்வு பணிகள் நடைபெறுகிறது என்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு எடுத்து சொல்வதற்காகவே இமெல்டா சுகமாரையும் தவரட்ணத்தையும் சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக