25 செப்டம்பர் 2011

எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என்கிறார் சவேந்திர சில்வா!

உலகின் எந்தவொரு நீதிமன்ற விசாரணையையும் சந்திக்கத் தயார் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், தமக்கும் தமது படையணியைச் சேர்ந்த படையினருக்கும் எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமாறு ஷவேந்திர சில்வாவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஷவேந்திரா சில்வா பதிலளிக்க வேண்டுமென அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எந்தவொரு நபரினாலும் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஷின் மனைவியும், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சீதாராம் சிவம் என்வரின் மகளும் அமெரிக்க நீதிமன்றில், ஷவேந்திர சில்வாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக