15 செப்டம்பர் 2011

நெதர்லாந்து நீதிமன்றில் ஐந்து தமிழர்களுக்கு எதிரான வழக்குஇன்று!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய ஐந்து பேர் தொடர்பிலான வழக்கு ஒன்று, இன்றைய தினம் நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது. த ரேடியோ நெதர்லாந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில், நெதர்லாந்தில் நடைபெற்று வந்த தமிழர்களின் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை காவற்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். ஒப்பரேசன் கொனிக் என இந்த முன்னெடுப்புக்கு பெயரிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னரும், இந்த நிதி வழங்கல் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.
இந்த குற்றச்சாட்டின் கீழ் பல நெதர்லாந்து தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் தொடர்பிலான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த குழுவில், நெதர்லாந்தில் இயங்கிய விடுதலைப் புலிகளின் கிளைத்தலைவர் என நம்பப்படும் ஆர்.சிறிரங்கமும் உள்ளடங்குகிறார்.
நெதர்லாந்தின் ஹேக் நகர நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது. ஏற்கனவே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என, சிறிரங்கத்தின் சட்டத் தரணி, விக்டர் கொபே ஐரோப்பிய சங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக