17 செப்டம்பர் 2011

ஜெனீவா மாநாட்டில் இலங்கை அரசு மண்டியிட்டது!

ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசு மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டதால்தான் சர்வதேச நாடுகள் தனது இறுக்கமான கெடுபிடிகளைத் தளர்த்திக்கொண்டன என்று ஐக்கிய சோஷலிஸ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.
"ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 18ஆவது கூட்டத் தொடரில் தப்பிப்பிழைத்துக்கொள்ளும் நோக்குடனேயே அரசு தனது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை வெளியிடும் காலத்தை இழுத்தடித்தது.
இதனால்தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானதும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என சர்வதேச சமூகம் தீர்மானித்துள்ளது.
ஜெனிவாவில் உறுதிமொழிகளை அள்ளி வீசிய இலங்கை அரசு அதனை இங்குவாழ் மக்களுக்கு கட்டாயம் செய்யவேண்டும். இல்லையேல் இலங்கைக்கு கெட்டகாலம் என்றே சொல்லலாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு.
அதனால்தான் சர்வதேசம் பொறுமை காக்கிறது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு அரசு வெற்றிபெற்றுவிட்டோம் என மார்தட்டும் வேலையை விடுத்து மக்களுக்கு நீதியை வழங்க முன்வரவேண்டும்" - என்றார் ஐக்கிய சோஷலிஸ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக