10 செப்டம்பர் 2011

படைசிப்பாய்க்கு கத்திக்குத்து!பண்டத்தரிப்பில் சம்பவம்.

மதுபோதையில் நின்றவருடன் தகராறில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்கானார். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயச் சூழலில் நள்ளிரவு வேளை மதுபோதையில் இருந்த இளைஞர்களிடம் அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அவர்களிடம் தேவையற்ற விதத்தில் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் தடிகள் பொல்லுகள் சகிதம் நின்றபோது இராணுவத்தினர் அதனைப்
பறிக்க முற்படுகையில் கையில் கத்தி வெட்டிற்கு இலக்கானார். இதனையடுத்து நேற்றுக் காலை அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் தகராறில் ஈடுபட்ட நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டுச் சென்றனர். அச்சம் காரணமாக குறித்த நபரை இராணுவ முகாமில் ஒப்படைத்த போது, குறித்த நபரை இராணுவத்தினர் தாக்கியதோடு எச்சரிக்கை செய்து விடுவித்ததாக யாழ்ப்பாணச் செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக