
சம்பவத்தில் ஏழாலை மேற்கு உதய சூரியன் சனசமூக நிலைய செயலாளரான செல்வராஜா கிருசன் வயது 32 என்பவரே கைது செய்யப்பட்டவராவார். குறித்த நபர் 5.09.2011 அன்றைய தினம் அச்சிட்டு வெளியிட்டதாகக் கூறப்படும் தமிழ் தேசியப் பற்றுள்ள இயக்கம் என்ற பெயரில் துண்டுப் பிரசுரத்தை மேற்குறித்த சனசமூக நிலையத்தில் வைத்திருந்ததாக தெரிவித்து யாழ்ப்பாணப் பொலிசாரால் செவ்வாய்கிழமை இரவு 8.45 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் சுன்னாகம் பொலிஸ் நிலைய எல்லைக்குள் இருந்த போது யாழ்ப்பாணப் பொலிசாராலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக