
சிறைக் கைதிகளின் உரிமைகளுக்கான பேரவை என்கிற அமைப்பு சட்டத்தரணி பி.புகழேந்தியின் நெறிப்படுத்தலில் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பை கடந்த மே 14 ஆம் திகதி மத்திய அரசு அறிவித்து இருந்தது. இத்தடை நீடிப்பு சட்ட ரீதியானதா? இல்லையா? என்று விசாரித்து-ஆராய்ந்து -தீர்ப்பு வழங்கவே விசேட ஆயம் நியமிக்கப்பட்டது.
ஆனால் விசேட ஆயம் புலிகள் இயக்கம் மீதான மத்திய அரசின் தடை நீடிப்பு சட்ட ரீதியானது-சரியானது-செல்லுபடியானது என்கிற முடிவுக்கு வந்ததற்கு பிரதான காரணமாக நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்தை குறிப்பிட்டுக் காட்டி இருந்தது.
ஆனால் நாடு கடந்த அரசு கடந்த மே மாதம் 17 ஆம் திகதிதான் அமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் விசேட ஆயம் இவ்விடயத்தை கருத்தில் கொள்ளாமல் தவறான தீர்ப்பு வழங்கி விட்டது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமக்காய் எம் இயக்கத்திற்காய் போராடுபவர்களுக்கு ஈழ மக்கள் சார்பாக நன்றிகள்.
பதிலளிநீக்கு