16 பிப்ரவரி 2011

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் வெட்டிக்கொலை!சீமான் அஞ்சலி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்த சுப.முத்துக்குமார் நேற்று இரவு புதுக்கோட்டையில் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.
இன்று மதியம் நாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர் சீமான் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘’தமிழ்நாட்டில் கூலிக்கொலையாளிகள் பெருகிவிட்டனர். சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக கெட்டுவிட்டது. முத்துக்குமார் இழப்பு எங்களுக்கு பேரிழப்பு.
இந்த கொலையை செய்தது யார் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் திட்டமிட்டே செய்திருக்கிறார்கள். போலீஸ் உண்மையான கொலையாளிகளை பிடிக்கவேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் எங்களது நடவடிக்கை பற்றி ஆலோசிப்போம்.
முத்துக்குமாருக்கு படத்திறப்பு நாளில் எங்களின் எழுச்கூட்டம் நடைபெறும். இந்த சூழ்நிலையில் என்னால் அதிகம் பேசமுடியவில்லை’’ என்று தெரிவித்தார்.

1 கருத்து:

  1. இதற்கு பதில் யாராக இருந்தாலும் சொல்லியாக வேண்டும், இல்லாவிடில் சொல்லவைப்போம்.

    பதிலளிநீக்கு