25 ஏப்ரல் 2011

நம்பியாரின் பெயரை தவிர்த்திருக்கும் நிபுணர் குழு!

ஐ.நா இதுவரை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை வெயிளிடாமல் வைத்திருக்கிறது. ஆனால் இலங்கையிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட்டு வருகிறது. இறுதியாக வெள்ளைக் கொடி விவகாரம் சம்பந்தமான பகுதியை வெளியிட்டிருக்கிறது.
ஐலண்டில் வெளியான நிபுணர் குழுவின் அறிக்கையில் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாகவும் அதனுடன் சம்பந்தப்பட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபேய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இப்போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஐ.நாவுக்கான நிரந்தரத் தூதுவர் பாலித கோகண ஆகியோருடைய பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஐ.நா நிபுணர் குழுவின் விபரிப்பின்படி நடேசன்,புலித்தேவன் மற்றும் கேர்ணல் ரமேஸ் ஆகியோர் சரணடைவதற்கான கோரிக்கையை ஐ.நா அலுவலருக்கு அனுப்பி உள்ளனர். இதன் விளைவாக சரணடைந்தால் அவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதம் அவர்களுக்கு இவ்விடயத்தில் தொடர்பாளர்களாகச் செயற்பட்டவர்களால் வழங்கப்பட்டது. எனினும்; அவர்கள் சரணடைந்ததன் பின்னர் கொல்லப்பட்டார்கள்.
எனினும் நிபுணர் குழு இதில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஐ.நா அலுவலரான விஜய் நம்பியாரின் பெயரை குறிப்பிடவில்லை.
பதிலாக இதில் சம்பந்தப்பட்ட ஐ.நா அலுவலர் ஒருவர் சரணடைபவர்கள் கொல்லப்பட மாட்டார்களய் என்ற உறுதி மொழியை வழங்கியிருந்தார் என்றே குறிப்பிட்டிருக்கிறது. நம்பியார் தான் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்.
2009இல் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இன்னர் சிற்றி பிரஸ் தொடர்ந்து பலமுறை திரும்பத் திரும்ப நம்பியாரின் பாத்திரம் இதில் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. நம்பியார் தான் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறி ஒரு சிறிய நேர்காணலையும் இன்னர் சிற்றி பிரஸுக்குக் கொடுத்திருந்தார். ஆனால் நிபுணர்குழு அசட்டையான முறையில் நம்பியாரின் பெயரை இதில் தவிர்த்திருக்கிறது.
இவ்வகையில் இந்நிபுணர் குழு அறிக்கை தனிப்பட்ட நலன்கள் சார்ந்ததாக இருப்பது தெளிவாகிறது.
இவ்வாறு அஜாக்கிரதைத் தனத்துடன் அறிக்கையை வெளியிட அனுமதித்த பான் கீ மூனும் ஐ.நாவும் அடுத்து என்ன செய்யக் கூடும்? அதுவும் இவ்வாறான தனிப்பட்ட நலன்கள் ஊடுருவியிருக்கும் போது?

1 கருத்து:

  1. செருப்பால் அடித்து நாட்டை விட்டு விரட்டபடவேண்டிய சொறி கும்பலில் இவனும் ஒருவன்.

    பதிலளிநீக்கு