28 பிப்ரவரி 2011

அடுத்த கட்டப் போர் கடல் வழியாக தரையிறங்கி ஆரம்பிக்கப்படலாம்!

வடபகுதி கடல் ஊடாக தரையிறங்கும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட த லக்பிம வாரஏடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள விடுதலைப்புலிகளின் படையணிகள், தமது ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்ததும், வடபகுதி கடற்கரை ஊடாகவே தரையிறக்கத்தை மேற்கொள்ளவுள்ளனர்.வடபகுதி கடல் ஊடாக தரையிறங்ககும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாக புலம்பெயர் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதேசயம், தென் சூடானை போன்றதொரு, தீர்வை வடக்கு – கிழக்கில் கொண்டுவரவும் புலம்பெயர் தமிழ் சமூகம் முற்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கான நிதி உதவிகளை புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து வழங்கியவாறு உள்ளது. விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு கிளைகள் தமது செயற்பாட்டை வேகப்படுத்தி வருகின்றன.
கனடாவையே விடுதலைப்புலிகள் பிரதான தளமாகப் பயன்படுத்தக்கூடும். சன் சீ கப்பலில் சென்றவர்களில் பலர் இறுதிக்கட்டச் சமரில் தப்பியவர்கள் என கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் பல இளநிலை தளபதிகள் கனடாவுக்கு சென்றுள்ளதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். கனடா 250,000 தமிழ் மக்களை கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஊடாக தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதானமாக தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் ஊடாகவே பல படையணிகள் தப்பிச் சென்றுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 இற்கு மேற்பட்டோர் ஏற்கனவே கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
விடுதலைப்புலிகளின் நிதி திரட்டும் பணிகள் நிறைவடைந்ததும், அவர்கள் தமது இராணுவக்கட்டமைப்பின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள். தற்போது பல அரசியல் நகர்வுகளை அனைத்துலக மட்டத்தில் அவர்கள் மேற்கொண்டு வந்தாலும், இராணுவ நடவடிக்கையையே புலம்பெயர் தமிழ் சமூகம் விரும்புவதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே அவர்கள் முதலில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. எனினும் அவர்களின் நடவடிக்கையை தெரிவுகள் தீர்மானிப்பதில்லை. சூழ்நிலை தான் தீர்மானிக்கின்றது.
வடக்கு – கிழக்கில் அதிக படையினரை சிறீலங்கா அரசு குவித்துள்ளதால், தென்னிந்தியாவில் வைத்து தமது அணிகளை விடுதலைப்புலிகள் தயார்படுத்தலாம். தாக்குதல்களுக்கான திட்டங்களும் அங்கிருந்தே வகுக்கப்படவுள்ளன. விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் தற்போதும் அதிக ஆதரவுகள் உண்டு.
தமிழகத்தின் காடுகளில் விடுதலைப்புலிகள் தமது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய புலனாய்வுப்பிரிவும் தகவல்களை தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவும், வான்படையும் அங்கு பிரவேசித்துள்ளன. விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படைகளும் தயாராகி வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் – ஈழம் ஈ நியூஸ்

27 பிப்ரவரி 2011

கொலை வெறியர் பிடியில் தமிழர் உயிர்கள்!

மட்டக்களப்பின் புறநகர் பகுதியான சத்துருக்கொண்டான் புதிய பனிச்சையடியிலுள்ள மதகு ஒன்றினுள் பொலித்தீன் பையினுல் சுருட்டிக்கட்டிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் மட்டக்களப்பு பொலிஸாருக்கு பொலித்தீன் பையினுல் சந்தேகத்திற்கிடமான பொருள் மதகினுள் வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின் போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று மாலை சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு பதில் நீதிபதி வி.எம்.சியாம் விசாரணைகளை மேற்கொண்டார்.
இதுவரை குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏறாவூரில்……
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளியில் ஆடு மேய்ப்பதற்காக சென்ற பெண்ணொருவர் உருக்குலைந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜின்னா வீதி பாலையடித்தோனாவிலிலுள்ள மதகு ஒன்றிற்கு அருகிலுள்ள ஏரிக்கரையோரத்தில் இவரது சடலம் மீட்கப்பட்டது.
பாலையடித்தோனா சந்திவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ரூபாசினி ஜெயக்கணேஷ் (வயது 18) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல தனது ஆடுகளை மேய்ப்பதற்காக அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண்ணின் கணவன் தொழில் நிமித்தம் அரேபிய நாடொன்றுக்கு சென்றிருந்த நிலையில், தனது மகளுடன் அவர் வசித்து வந்துள்ளார்.

சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியும் என்பவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்!

சொந்த ஊரான வல்வெட்டித்​துறையில் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தில், அதே இரவில்... சில நாய்களை அரைகுறையாக எரித்துப் போட்டுவிட்டு, அஸ்தியையும் சிதறடித்துச் சென்றுள்ளன, மனித உருவில் வந்த சில மிருகங்கள்!இப்படியும் நடந்து​கொள்​ளுமா மனித ஜென்மங்கள்?'' எனும் அளவுக்கு, மீண்டும் ஒரு முறை கோர முகம் காட்டி இருக்கிறது சிங்களப் பேரின​வாதம்!
பொதுமக்கள் அஞ்சலிக்காக, பார்வதி அம்மாளின் உடல் வைக்கப்பட்டு இருந்த இடமே சிங்கள இராணுவத்துக்குப் பிரச்சனைதான். பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை இறந்தபோதும், இந்த இடத்தில்தான் அவரது உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது.
இந்த சதுக்கத்தில்தான் குமரப்பா, புலேந்திரன் உள்பட்ட 12 புலிப் போராளிகளுக்கும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அவர்களின் நினைவாக பன்னிரு போராளிகள் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது.
தளபதி கிட்டுவின் நினைவாக ஒரு கப்பல் நினைவுச் சின்னமும் இங்கு அமைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் கடந்த கால நினைவுகளை மனதில் போற்றிய அந்தச் சின்னங்களும் சிங்களப் படையால் இடிக்கப்பட்டன.
இடத்தில், 'பார்வதி அம்மா​ளுக்கு இறுதி மரியாதை செலுத்த, தமிழ் மக்கள் திரண்டுவிடக் கூடாது’ என்பதில் சிங்கள இராணுவம் மூர்க்கத்துடன் வல்வெட்டித்துறையில் குவிக்கப்பட்டது.
தீருவில் சதுக்கத்தை நோக்கிய சாலைகளில் சென்ற அனைவரையும் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திருப்பி அனுப்பினர்.
தெரிவிக்கக் கட்டப்பட்ட கறுப்புக் கொடிகளை அகற்றுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டினர். அடைக்கப்பட்ட கடைகளை திறக்குமாறும் கட்டாயப்படுத்தினர்.
ஆனால், கொந்தளித்து நின்ற வல்வெட்டித்துறை மக்களிடம் அவர்களின் பாச்சா பலிக்கவில்லை. இளையவர்கள், முதியவர்கள், ஊனம் அடைந்தவர்​கள்கூட இறுதி ஊர்வலத்தில் பங்கேற்​றனர்.
அடுத்து, யாழ் பல்கலைக்​கழக மாணவர்களைப் பங்கேற்க​விடாமல் தடுக்க முயற்சித்தது சிங்கள அரசு. பல்கலைக்கழகம் உள்ள திருநெல்வேலியில் இருந்து 22 கி.மீ. தொலைவு கடந்து இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக, மாணவர்கள் பேருந்து​களில் புறப்பட இருந்தனர். அவர்களை உள்ளூர் பொலிஸார் மிரட்டினர்.
தனியார் பேருந்து உரிமையாளர்​களையும் மிரட்டினர். ஆனாலும் தடைகளை மீறி 2,000 பேர் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலிகள் ஆதரவு தமிழ்த் தேசிய மக்கள் முன்ன​ணியின் தலைவர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.
முன்னதாக காலை 10.30 மணிக்கு தீருவில் சதுக்கத்தில், டாக்டர் மயிலேறும் பெருமாள் தலைமையில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
இருந்து பழ.நெடுமாறன், வைகோ, உணர்ச்சிக் கவிஞர் காசி​ ஆனந்தன், சீமான், நார்வே நாட்டில் இருந்து ஈழத் தமிழர் அவையின் பிரதிநிதியான விஜய் அசோகன் ஆகியோர் தொலை​பேசி மூலம் அஞ்சலி உரை நிகழ்த்​தினர்.
உள்ளூர்த் தலைவர்கள் பேசிய பிறகு, ஆலடி ஒழுங்கை எனும் இடத்தில் உள்ள பிரபாகரனின் மூத்த அக்காள் ஜெகதீஸ்வரியின் வீட்டுக்கு பார்வதி அம்மாளின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
பிற்பகல் 2.45 மணி முதல் மாலை 4.30 மணிவரை சைவ முறைப்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. யாழ்ப்பாண வழக்கபடி, வேலுப்பிள்ளையின் ஒன்றுவிட்ட தம்பியான சங்கரநாராயணன் இறுதிக் கிரியைகளைச் செய்தார்.
வல்வெட்டித்துறை கடற்கரையில் உள்ள ஊறணி மயானத்தில் பார்வதி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. மறுநாள் காலை கடலில் கரைப்பதற்காக உறவினர்கள் அஸ்தியை எடுக்கச் சென்றனர்.
அப்போதுதான், அந்த அதிர்ச்சி! அங்கே, பார்வதி அம்மாளின் அஸ்தி எங்கும் சிதறடிக்கப்பட்டு இருந்தது. கூடவே, மூன்று நாய்களின் சடலங்களும் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் கிடந்திருக்கின்றன. வேறு வழியின்றி அவற்றை கடற்கரையில் புதைத்துவிட்டு, அஸ்தியை எடுத்து வந்துள்ளனர்.
வடக்கு இலங்கை மாகாணத்தின் ஓய்வுபெற்ற கல்வித் துறை அதிகாரியான வல்வை ஆனந்தராஜ் நம்மிடம், ''அம்மாவின் மோசமான கடைசிக் காலத்துக்கு நாங்களும் காரணமாக இருந்துவிட்டோமே என்பது வருத்தம் அளிக்கிறது.
சொந்த ஊரில், நம்மவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்தும், மருத்துவமனையில் இருந்த அம்மாவை சிங்கள மக்கள் ஒரு காட்சிப் பொருளைப்​போலத்தானே பார்த்துச் சென்​றார்கள்.
உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்திருந்தால், அவருக்கு இப்படி எல்லாம் நடந்திருக்குமா? தமிழக உறவுகள் அம்மாவை இப்படி விட்டிருப்பார்களா?'' என்றார் மனத்தாங்கலுடன்.
யாழ்ப்பாண முன்னாள் எம்.பி-யான சிவாஜிலிங்கம், ''அம்மாவின் உடலை விதைக்கலாம் என சிலர் என்னிடம் சொன்னார்கள். அதை வன்மையாக மறுத்தேன். அவர்களுக்குக் காரணம் புரியவில்லை.
ஞாயிறு, திங்கள் இரு நாள்களும் இரவு முழுவதும் அம்மாவின் உடல் அருகிலேயே இருந்தோம். ஆனாலும் சிதையின் மீது ஒரு காட்டிமிராண்டித்தனத்தை செய்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கும்போது, இங்கே எப்படி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் வரும்?'' என்று கோபப்பட்டார்.
''சிங்களவருடன் எங்களை சமாதானமாக வாழச் சொல்​பவர்கள், இதற்குச் சரியான பதில் சொல்வார்களா?'' என்ற ஈழத் தமிழர்களின் கேள்வி நெஞ்சில் அறைகிறது!
நன்றி:ஜூனியர் விகடன்.

இன அழிப்புக்கு எதிரான சர்வதேச விசாரணை அவசியம்!

இலங்கையில் நடந்தது போர்க்குற்றங்களல்ல. அது இன அழிப்பு நடவடிக்கை பலரும் கடந்த மூன்று வருடங்களில் நடந்த போர் குற்றங்களை விசாரிக்க வேண்டுமெனக் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் கடந்த முப்பது வருடங்களாக நடத்தப்பட்ட இன அழிப்புப் பற்றி விசாரணை இடம்பெற வேண்டுமெனக் கோருகின்றோம் என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
யாழ். நரிகல் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெவிக்கையில், ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம் முதல் மாறி மாறி ஆட்சியேறிய பிரேமதாஸ , சந்திரிகாவென தமிழர்களுக்கெதிரான இன அழிப்பு தொடர்ந்து தற்போதைய மஹிந்த ஆட்சியில் கடந்த மூன்று வருடங்களில் அது உச்சம் பெற்றுள்ளது.
பலரும் போர்க் குற்ற விசாரணைகள் இடம் பெற்று குற்றமுடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்கின்றனர். இதனால் தமிழ் மக்களது பிரச்சினைக்கு என்ன தீர்வு கிட்டப் போகின்றதென்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
தமிழர்கள் தொடர்பில் சர்வதேசம் அக்கறை கொண்டுள்ளது. கடந்த 60 வருடகால போராட் டம் அதற்குக் காரணமாக இருக்கலாம் அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பிலாகவும் அது இருக்கலாம். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால் சர்வதேசமோ மஹிந்த ஆட்சியி லான கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற போர்க் குற்றங்களிலேயே அக்கறை காட்டுகின்றது. ஆனால் எமது கட்சியோ போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசத்திற்கு ஆர்வமெனில் கடந்த 30 வருடகால போர்க்குற்றங்களை விசாரணை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபைக்கான தேர்தலைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பகிஷ்கரிக்கும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் மாகாணசபைத் தேர்தலை பகிஷ்கரிக்கவேண்டுமென பகிரங்க மாக அழைப்பும் விடுக்கின்றோம். இத்தேர்தலைப் பகிஷ்கரிப்பது தொடர்பிலும் தேவையாயின் கட்சிகள் சாராத பொதுவேட் பாளர்களை நிறுத்துவது தொடர்பிலும் சில பொதுவான விடயங்களை விட்டுக்கொடுத்து சமரசத்துக்கு வர நாம் தயாராக இருக்கிறோம்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பு தேசியவாதக் கொள்கையை கைவிட்டு இப்போது பெயரில் மட்டும் தேசியத்தைக் கொண்டிருக்கின்றது. எந்தக் கொள்கைகளை முன்வைத்து தமிழ்த்தேசி யக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ , அதே கொள்கை மூலத்திற்கு கூட்டமைப்பு திரும்புமானால் சிலபொதுவான விடயங்களை விட்டுக் கொடுத்து அதனுடன் இணைந்து செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம். குறிப்பாக 13ஆவது திருத்த சட்டத்தின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதை எமது கட்சி போன்றே, கூட்டமைப்பும் நிராகரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.
கூட்டமைப்பில் பலர் இப்போது முதலமைச்சர் கனவுகளுடன் இருக்கின்றார்கள் தாங்கள் போட்டியிடாவிட்டால் தேவையற்றவர்கள் வந்துவிடுவார்கள் என அவர்கள் எண்ணுகின்றனர். அவ்வாறானதோர் சூழல் ஏற்படுவதை தவிர்க்க புத்திஜீவிகளைக் கொண்ட கட்சி சாராத , சமூக மதிப்புள்ள தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற குழுவொன்றை தேர்தலில் நிறுத்தலாம். அக்குழுவிற்கு கூட்டமைப்புடன் இணைந்து ஆதரவளிக்க நாம் தயாராகயுள்ளோம்.
ஏற்கனவே 1989 ஆம் ஆண்டினில் வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை , அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரித்திருந்தது. எந்தவொரு பயனுமற்றது மாகாண சபையெனக் கூறி அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு மகஜரொன்றும் அனுப்பப்பட்டிருந்தது. அதில் ஒப்பமிட்டவர்களில் கூட்ட மைப்பின் தலைவரான சம்பந்தனும் ஒருவர்.
13 ஆவது திருத்த சட்டத்தின் கீழான தீர்வை ஏற்றுக்கொண்டால் அதன் பின்னர் சுயநிர்ணய உரிமை தேசியம் பற்றிப்பேசுவதற்கு சட்டரீதியாக இடமின்றிப்போகும் என்றார்.

மனித உரிமை பேரவை அமர்வுகளுக்கு அஞ்சுகிறது ஸ்ரீலங்கா!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நாளை 28ம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகளின் மனிதப் பேரவை அமர்வுகள் ஆரம்பாகவுள்ளன.
புலி ஆதரவாளர்களுக்கு இந்த அமர்வுகளில் பங்கேற்க சந்தர்ப்பம் அளிக்க வேண்டாம் என பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
அமர்வுகளில் பங்கேற்பதற்கு உத்தேசித்துள்ள புலி ஆதரவாளர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அவர்களுக்கும் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான தொடர்பு குறித்த சாட்சியங்கள் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.
சர்வதேச புலிகள் வலையமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் இந்த அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரியுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், இவ்வாறான ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பேரவையில் உரையாற்ற சந்தர்ப்பம் அளிப்பது சட்டவிரோதமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

26 பிப்ரவரி 2011

தமிழ் மாணவர்களுக்கு சிங்களப்படை ஆயுதப் பயிற்சி!

சிறிலங்கா விமானப்படை தியத்தலாவ முகாமில் மாணவ கடெற் பயிலுனர்களுக்கு ஆயுதப் போர்ப்பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. இந்தப் பயிற்சி முகாமுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களும், மட்டக்களப்பில் இருந்து முஸ்லிம் கல்லூரி மாணவர்களும் சிறிலங்கா விமானப்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
சுமார் 1000 வரையான பாடசாலை மாணவர்கள் 40 பிளட்டூன்களாகப் பிரிக்கப்பட்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு வாரகாலம் தியத்தலாவ விமானப்படைத் தளத்தில் வைத்து இவர்களுக்கு ரி-56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாளும் போர்ப்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் தேசிய கடெற் படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பயிற்சியின் முடிவில் இடம்பெற்ற நிகழ்வில் சிறிலங்கா விமானப்படையின் நிர்வாகப் பிரிவு பணிப்பாளர் எயர் வைஸ் மார்சல் றோகித ரணசிங்க கலந்து கொண்டு சிறந்த பயிற்சியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சிறிலங்கா அரசாங்கம் மீசை முளைக்காத பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் போர்ப் பயிற்சிகளை வழங்கியுள்ளது. சிறார்களை படையில் சேர்க்கின்ற முயற்சியா என்ற பலத்த சந்தேகத்தைக ஏற்ப்படுத்தியுள்ளது.

நாய்களை கொல்வது தண்டனைக்குரிய குற்றம் என்கிறார் மகிந்த.

மான், மரை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, யானைகள், சிறுத்தை, கரடி, மயில் போன்ற மிருகங்கள் நாட்டின் தேசிய வளங்களாக இருப்பதனால், அவற்றை இறைச்சிக்காக அல்லது வேறு ஏதாவது இலாபமடையும் நோக்கத்திற்காக சுட்டுக் கொல்வது இலங்கைச் சட்டத்தின்படி ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.
அது போன்றே மனிதனின் நெருங்கிய நண்பனான நாயும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ள ஒரு மிருகமாகும். நாய்களை துப்பாக்கியால் சுட்டு அல்லது அடித்துக் கொல்வது ஒரு தண்டனைக்குரிய குற்றமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ஆகவே, நாய்களை கொல்லுதல் அல்லது அடித்து ஊனமாக் குதல் தண்ட னைக்குரிய குற்றமாகும் எனவும் அதில் சம்பந்தப்பட்டவர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாய்கள் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டும் அடித்தும் நச்சு ஊசிகளைக் குத்தியும் கொல்வது உடனடியாக தடுக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் அவற்றை அழிப்பது அவசியம் என்ற சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடலாகாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கையை நாடெங்கிலும் குறைக்க வேண்டுமானால் அவற்றை பிடித்து நோய் தடுப்பு ஊசிகளை குத்தியும் கருத்தடை சத்திரசிகிச்சைகளை செய்தும் சுதந்திரமாக இருப்பதற்கு இடமளிக்க வேண்டுமென்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
இத்தகைய நோய்த்தடுப்பு கருத்தடை, சத்திரசிகிச்சைகளை செய்வதற்காக அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களின் வைத்திய பிரிவுகளுக்கு வருடாந்தம் பல இலட்சம் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
விசர் நாய்களை மாத்திரமே உள்ளூராட்சி மன்றங்கள் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அழித்துவிடலாம் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால், இன்று மனிதனின் உற்ற நண்பனாக இருந்து அவனது வீட்டை பாதுகாத்து விஷப்பாம்பு போன்ற கொடிய பிராணிகளை அழித்தும் மனிதனுக்கு பல் வகையில் உதவி செய்துவரும் நாய்களுக்கு இப்போது ஓரளவு பாதுகாப்பு கிடைத்துள்ளது.
அப்படியாயின் யாழ்ப்பாணத்திலுள்ள நாய்கள் நாய்கள் இல்லையா?.....

இவர்களை உள்வாங்குவதால் நாடுகடந்த தமிழீழ அரசிற்கு ஆபத்து!

தமிழீழத் தேசியத் தலைவரின் விருப்பை அடைவதற்காக மாவீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட போதும் அது தேசியம் சார்ந்தோர் என தம்மை தாமே அடையாளப்படுத்தப்பட்ட நபர்களினால் அடைந்த துன்பம் அளப்பரியது.நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அதன் செயற்பாட்டை முடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்ட சிங்கள அரசின் திட்டமிட்ட சதிக்கு துணை போன குழுவினர் நாடு கடந்த அரசின் இரண்டாம் அமர்வின் போது மக்களால் இனங்காணப்பட்டனர்.
நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களையும், அதன் சபாநாயகர் பொன். பாலராஜன் அவர்களையும் அப்புறப்படுத்தி அதனைக் கைப்பற்ற அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையை பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுதிரண்டு முறியடித்தனர.
இதன்பின் இக் குழு சிறீலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு வருகிறது என்றும், என்ன பாடுபட்டாவது நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை நிறுத்தி விட வேண்டும் என்றும் இது ஒரு குழுவாகச் செயற்பட்டது என்பதும் இனங்காணப்பட்டது.
தேசியத்தின் பெயரால் இக் குழுவிலுள்ளவர்கள் நடாத்தும் இணையத்தளங்கள், பத்திரிகைகள் என்பன நாடு கடந்த அரசை மிகவும் தரக்குறைவான ஒரு பிரச்சாரத்திற்குள் வைத்திருந்தன. நாடு கடந்த அரசின் பிரதமரை நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் ஒப்பிட்டு 23ம் புலிகேசி எனப் பரிகசித்து பல கடிதங்களையும் கட்டுரைகளையும் வரைந்தன.
இதில் கவலையான விடயம் என்னவென்றால் இந்த ஊடகங்கள் அனைத்தும் தமிழீழம் என்ற தனியரசிற்கு உரம் சேர்க்கும் ஊடகங்களாகவே உருவாக்கப்பட்டிருந்தன. இக்குழுக்களின் நேரடி கண்காணிப்பில் அமைப்பினால் துரோகிகள் என இனம் காணப்பட்ட மாற்று இயக்க உறுப்பினர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட பத்திரிகைகளும் இவர்களுக்கு துணையாக செயற்பாட்டில் இறங்கினர்.
இவ்வாறு ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்ட மலினப் பிரச்சாரங்களை மிஞ்சும் வகையில் இந்த சத்தியப் பிரமாணம் எடுக்காத உறுப்பினர்கள் தங்களின் மின்னஞ்சல்களினூடாக பல விசமப் பிரச்சாரங்களையும், பிரதமர் உருத்திரகுமாரனையும் ஏனைய உறுப்பினர்களையும இலக்கு வைத்து நாடு கடந்த அரசைச் செயலிழக்கச் செய்யும் வகையில் இடம்பெற்றன.
இப் பிரச்சாரங்களை முறியடித்து நாடு கடந்த அரசு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுகிறது. நாடு கடந்த அரசின் பிரதமரின் பாதுகாப்பில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது. சூடான் சுதந்திர தேசமாகும் நிகழ்விற்கு நாடு கடந்த அரசு உத்தியோக பூர்வ அழைப்பை பெறுகிறது என்ற செய்திகள் தமிழீழ மக்களின் காதுகளில் தேனாகப் பாயத் தொடங்கின.
யார், யாரையெல்லாம் புலம்பெயர்ந்த மக்கள் தமிழீழம் காண்பதற்காக தெரிவு செய்தார்களோ அவர்களே நாடு கடந்த அரசிற்கு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து செயலிழக்க வைக்க முயன்ற நம்பிக்கைத் துரோகத்தைத் தாண்டி நாடு கடந்த அரசு பயணித்துக் கொண்டிருந்தது.
உலகமே வியக்கும் வண்ணம் இந்தியாவிலும் நாடு கடந்த அரசின் பணியை தமிழக உறவுகள் ஆரம்பித்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என எமது மக்களிற்கு எடுத்துக் கூறின.
எந்த இந்தியாவை எட்டாக் கணியாக நினைத்தோமோ அதே இந்திய மண்ணிலுள்ள எமது தமிழக உறவுகள் நாடு கடந்த அரச செயற்பாட்டை தடைகளையும் மீறி ஆரம்பித்தன.
இப்படியாக நாடு கடந்த அரசு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிற ஒரு நேரத்தில் தமிழீழ அரசைக் கவிழ்ப்பதற்காக செயற்பட்ட உறுப்பினர்களை சத்தியப்பிரமாணம் செய்ய நாடு கடந்த அரசின் சபாநாயகர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
உண்மையிலேயே இதனை வரவேற்க விரும்பினாலும் அதற்கும் மேலாக எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய ஒரு பணியை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் எங்கள் இனம் மீண்டும் எழுந்திருக்காதா என நினைத்திருந்த எமது மக்களிற்கு அடிவாணின் விடிவெள்ளியாகப் பிரசவித்த நாடுகடந்த அரசை சாம, தான, தண்ட, பேத முறைகளால் இல்லாது செய்ய முற்பட்ட இவர்கள் இனியும் உங்களது செயற்பாடுகளை மட்டுப்படுத்தவும், மட்டம் தட்டவும் தானே முயல்வார்கள்? இவர்களை உள்ளே எடுப்பதால் உங்களின் செயற்பாடுகள் மேலும் எதிர்ப்புக்களையும் தடைகளையும் தானே சந்திக்கப் போகின்றன?
நாடு கடந்த அரசிற்கு எதிரான இந்தச் பிரசாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டது மாதிரியல்லாமல் ஒரு குழு இவர்களை பின்னாலிருந்து ஆட்டுவித்ததை பலருமே கண்டோம்.
தேசியத்தின் பெயரிலான ஊடகங்களும் இந்த விசமப் பிரச்சாரத்தை முன்னெடுத்து தமிழீழக் குழந்தையை கருவறையிலே கொல்ல முயன்றதையும் தரிசித்தோம்.
அதே குழு இனியும் இவர்களைப் பாவித்து நாடு கடந்த அரசை செயலாற்றாமல் தடுக்காது என்பதற்கு என்ன உறுதி?
சூடான், லிபியா விவகாரங்களில் குரல் கொடுப்பதோடு, தேசத்தாய் பார்வதியம்மாவின் மரணத்தின் போதும் மக்களிற்கு வழிகாட்டியாக விளங்கி திடமே செயலாற்றும் நாடு கடந்த அரசையும் அதன் பிரதமரையும் இல்லாது செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள் எவ்வாறு அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு உதவுவார்கள்?
தயாள சிந்தனை, தாராள மனது, தேசியத் தலைவரை உளமாற ஏற்றதனால் ஏற்பட்ட நேர்த்தியான வழிகாட்டல் என்பவற்றைக் கொண்டுள்ள பிரதமரும், சபாநாயகரும் இவர்களை இருகரம் நீட்டி உள்ளே அழைத்தாலும் அவர்கள் கொண்டுள்ளது சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலே என்பதை எந்தவித சந்தேகமில்லாமல் நிரூபிக்கும் மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளிற்கான பதில் இவர்களை உள்ளே விட்டால் நாடு கடந்த அரசு மரணித்துப் போகும் அபாயம் உடனேயே ஏற்படும் என்பதே.
ஒரு நன்னீர்க் குளத்தைப் பாழாக்க ஒரு துளி விசம் போதும். எனவே நன்னீர்க் குளமாக உள்ள நாடு கடந்த அரசு இவர்களை உள்வாங்குவதன் மூலம் தனது செயற்பாடுகளில் மண்ணையள்ளிப் போடும் செயற்பாட்டிற்குள் சிக்குண்டு போகிறது என்பதை மக்கள் உடனடியாக கிரகித்து இந்த முயற்சித்துக் தடை போட வேண்டும்.

பாவலன்.

25 பிப்ரவரி 2011

புலிகளின் தலைவர்களினுள் தமிழ்ச்செல்வனும் முக்கியமானவர்!

"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்து வந்த எஸ்.பி தமிழ்ச்செல்வன் மீது அரச படையினர் தாக்குதல் நடத்தி இருக்கவில்லை.
அனுராதபுரம் தாக்குதல் நடத்தப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே புலிகள் இயக்க தலைவர்களை படையினர் வலை வீசி தேடி வந்தனர், படையினரால் தேடப்பட்டோர் பட்டியலில் தமிழ்ச்செல்வனும் மிக முக்கியமான ஒருவராக இருந்தார்."
இவ்வாறு தெரிவித்து உள்ளார் விமானப் படைத் தளபதி மார்ஷல் டபிள்யூ. டி.ஆர். எம்.ஜே.குணதிலக.
இவர் விரைவில் கடமையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
இந்நிலையில் உள்நாட்டு ஆங்கில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்து இருக்கின்றார்.
இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்து இருந்தவை வருமாறு:-
"புலிகளால் அனுராதபுரம் தாக்குதல் நடத்தப்பட்டு சில வாரங்களில் படையினரால் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். ஆனால் இது பழிவாங்கல் நடவடிக்கையாக இடம்பெற்று இருக்கவில்லை. புலித் தலைவர்களை மிக நீண்ட நாட்களாகவே தேடி வந்தோம். அரச படையினரால் தேடப்பட்டு வந்த புலித் தலைவர்களில் தமிழ்ச்செல்வனும் முக்கியமானவர்.
புலனாய்வுப் பிரிவினர் சரியான முறையில் தகவல்களைப் பெற்றனர். தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் உள்ளார் என நவம்பர் முதலாம் திகதி புலனாய்வுப் பிரிவினருக்கு மிகவும் உறுதியான தகவல் கிடைத்தது.
எனவே தமிழ்ச்செல்வனின் மறைவிடத்தை விமானங்கள் மூலம் தாக்கினோம். மிகவும் கடினமான இலக்குதான். ஆனால் எமது விமானிகள் சாதித்து விட்டனர். தமிழ்ச்செல்வனின் படுகொலை புலிகள் இயக்கத்தை கதி கலங்க வைத்தது. நாம் எப்படி தமிழ்ச்செல்வனின் மறைவிடத்தை கண்டு பிடித்தோம்? என்பது புலிகள் இயக்கத் தலைவர்களுக்கு மூடு மந்திரமாகவே இருந்தது. எனவே நிலத்துக்கு கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களில் பதுங்கி இருந்து கொண்டனர். தலைவர்கள் களத்துக்கு செல்லாமல் இருந்தமையால் புலிகளின் இராணுவ பலம் குன்றியது.
ஈழப் போர்-04 ஐ பொறுத்த வரை புலிகளால் 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீதான தாக்குதல் மிகப் பேரழிவை படையினருக்கு ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலுக்கு 23 தற்கொலைக் குண்டுதாரிகளை புலிகள் பயன்படுத்தி இருந்தனர்.ஆனால் அங்கு இருந்த எல்லா கட்டமைப்புக்களையும் அவர்களால் அழிக்க முடியவில்லை.
அரசு- தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையிலான 30 வருட கால யுத்தத்தில் படையினருக்கு மிக மோசமான தோல்வி ஆனையிறவு 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புலிகள் வசம் வீழ்ந்ததே ஆகும்.
30 வருட கால யுத்தத்தில் மிகப் பெரிய திருப்பு முனையாக படையினருக்கு அமைந்த விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரின் கூட்டுத் தலைமை ஆகும். இருவரும் சகோதரர்கள். எனவேதான் அனைத்து விதமான தடைகளையும் உடைத்து புலிகளை வெல்ல முடிந்தது.
இவர் இவ்வாறு தெரிவித்துள்ள போதும் ராணுவத்தினரால் இறுதிப்போர் ஆரம்பிக்கப்பட்டு புலிகளிடமிருந்த சில பகுதிகளை கைப்பற்றுவதற்கே ஓர் இரு வருடங்கள் ஆகியிருந்தன,ஆனால் இது தொடர்பாக அப்போது ராணுவத்தளபதிகள் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போது புலிகள் அணிகளுடன் முன்னரங்களிலேயே புலித்தலைவர்களும் நின்று தமக்கெதிராக களமாடுவதனாலேயே தம்மால் வெகு சீக்கிரமாக புலிகளின் நிலப்பரப்புக்குள் சுலபமாக நுழைய முடியாமல் உள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இறுதிப்போரின் போது புலிகளின் முக்கிய தளபதிகள் அனைவரும் கள முனையிலேயே தமது தாக்குதல் அணிகளுடன் இருந்து எதிரிக்கு எதிராக களமாடியிருந்தனர் என்பது உலகம் அறிந்த உண்மை.

மட்டக்களப்பில் மதபோதகர்கள் கடத்தப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் வெள்ளநிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மதபோதகர்கள் மூவர் பிள்ளையான் குழுவினரால் அழைக்கப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் நான்காம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கடந்த வெள்ள அனர்தத்தின் போது கிழக்கில் பாரிய அவலங்களை எதிர்கொண்டு வந்த மட்டக்களப்பு மக்களுக்கு உதவி புரிந்த சிவானந்தம் லூப் பாஸ்ரர் கணேசமூர்த்தி,சிவகுமார் யோனத் ஆகிய மூவருமே பிடிக்கப்பட்டவர்களாவர் கடந்த 22 ஆம் திகதி தமது அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் அலுவலகத்தில் இருந்து ரமேஸ் என்பவரால் அழைப்பு அனுப்பப்பட்டிருக்கின்றது அதனை அடுத்து அங்கு சென்ற போதகர்கள் மூவரும் காணாமல் போயிருக்கின்றனர்.அதன் பின்னர் நேற்று (24-02-2011) மட்டக்களப்பு பொலிஸாரிடம் காணாமல் போனமை தொடர்பில் முறையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பழைய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவரையும் உறவினர்கள் சந்தித்திருக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் மூவரும் கொழும்பு நான்காம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தமக்குத் தகவல் கிடைத்ததாக போதகர்களின் உறவினர்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிள்ளையானின் அலுவலகத்தில் மக்களுக்கான உதவிக்கான நிதி எங்கிருந்து கிடைத்தது,எவ்வளவு செலவிடப்பட்டது போன்ற விடயங்கள் குறித்து மிரட்டிக் கேட்டனர் என்று போதகர்கள் தமது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து வெளியே வர இராணுவப் புலனாய்வாளர்கள் அவர்களைக் கடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

24 பிப்ரவரி 2011

சிங்கள இனவெறி படைகளின் இழிவான செயல் கண்டனத்துக்குரியது!

சிங்கள துணைத் தூதரகத்தை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 26.02.2011 அன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் நேற்றிரவில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பகைவர்களாயினும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது நாகரிக மக்களின் கடமையாகும். ஆனால் இலங்கையில் சிங்கள இராணுவ வெறியர்கள் மாவீரர்களின் நினைவிடங்களை இடித்துத் தள்ளி அட்டூழியம் புரிந்து வருகிறார்கள்.
எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக வீரத்தாய் பார்வதி அம்மையாரின் தகனம் நடைபெற்ற சிதையை இழிவுபடுத்தியிருக்கிறார்கள். மனிதநேயமும் நாகரீகமும் அற்ற இந்த இழிசெயலைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள சிங்கள துணைத் தூதரகத்தை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 26.02.2011 அன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும்.
மயிலை#லஸ் சாலையில் உள்ள நாகேசுவரராவ் பூங்கா அருகே அணிவகுத்து அங்கிருந்து ஊர்வலமாக சிங்கள துணைத் தூதரக அலுவகத்துக்கு செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
எனவே இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகள் உணர்வாளர்கள் ஆகிய அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன். பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன், உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
அன்புள்ள
பழ. நெடுமாறன்
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்.

தமிழீழ தேசத்தின் தாய் தந்தையருக்கான முழுமையான தமிழ் இனத்தின் கௌரவம்!

தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் முதல் பதிவாக முக்கியத்துவம் பெறுகிறது. தமிழீழத் தாய்,தந்தையின் மரணப் பிரிவு.
வீரன் பிறந்த பூமியில் இன்று வீரம் பேசுகிறான் சிங்களவன், நிச்சயம் விரட்டி அடிப்பார்கள் வேலுப்பிள்ளையின் பேரமக்கள் விரைவாக!!
மக்களோடு மக்களாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தாய் தந்தையர் இருவரும் வட்டுவாகல் பகுதியில் இருந்து முட்கம்பி முகாம் நோக்கி கொண்டு செல்லப்பட்ட அன்றைய சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் இன்றும் அதை நினைத்து அந்தக் காட்சிகளை வர்ணிக்கவும் முடியாமல் விபரமாகச் சொல்லவும் முடியாமல் அழுது கண்ணீர் வடிப்பவர்கள் ஏராளம் கல்நெஞ்சரையும் உருகவைக்கும் சோக நிகழ்வாகவே நினைத்து அவர்கள் இன்றும் மனம் உருகுகிறார்கள்.
பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தாயார் சக்கர நாற்காலியில் வைத்து அந்த ஐனசமுத்திரத்தின் ஊடாகத் தள்ளிச் செல்லப்பட்ட காட்ச்சியும். இரத்த அழுத்தம் உட்பட வயிற்றோட்டம், தலைச்சுற்று போன்ற நோய்களால் துன்புற்ற சுயமாக நடக்க முடியாமல் நடந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தையை தூக்கிச் செல்ல முன்வந்த உறவுகளின் உதவியையும் ஏற்க மறுத்தார். அவர் பலமுறை தரையில் வீழ்வதும் எழுவதுமாக மீண்டும் மீண்டும் வீழ்ந்து எழுந்தே கொடியவரின் சித்திரவதை குகை நோக்கிய வீரப் பயணத்தை அன்றைய நாளில் தொடர்ந்திருந்தார்.
பல இன்னல்களைக் கடந்து செட்டிகுளம் முகாமுக்கு சென்ற இருவரையும் இராணுவப் புலனாய்வாளர்கள் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு சென்றனர் நாலாம் மாடியிலும் இன்னும் பல இடங்களிலும் வைத்து சித்திரவதகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் இவர்களுக்காக தனித் தனி சிறைகளில் அடைக்கப்பட்டார்கள் பார்ப்பதற்கோ உதவி செய்வதற்கோ யாரும் அனுமதிக்கப் படவில்லை இராணுவத்தினர் மட்டும் ஆயுதம் ஏந்தியபடி எப்பொழுதும் நின்றிருப்பார்கள்.
இளைப்பாறிய அரச ஊழியரான வேலுப்பிள்ளையின் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு அரசினால் நிறுத்தப்பட்டது. அவருக்கு என்ன வகை உணவளித்தார்கள் எப்படி பராமரித்தார்கள் எப்படிப்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டதோ தெரியவில்லை. தேசியத் தலைவரின் தந்தை இராணுவ சித்திரவதைகளின் காரணமாக கொழும்பு சிறைச்சாலை ஒன்றில் தமிழீழ தேசத்தின் தந்தையாக வீரகாவியமானார். அவருடைய வித்துடல் வீரத்தின் பிறப்பிடத்திர்க்கே கொண்டு வரப்பட்டு அங்கு தகனஞ் செய்யப்பட்டது.
அதன் பின்னர் அன்னை பார்வதியம்மாளின் உடைநிலை இன்னும் மோசமடைந்தது புலம் பெயர்ந்து வாழும் அவரது பிள்ளைகளுடன் சேர்வதற்கு பெரும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அவர் விரும்பிய நாட்டிற்குச் சென்று சிகிச்சை பெறலாம் என்று மகிந்த அரசு அறிவித்தது ஆனால் சிங்கப்பூர் மலேசியா தவிர வேறு நாடுகளுக்கு அன்னையால் செல்ல முடியவில்லை அப்படியிருந்தும் சில முயற்ச்சிகளை எம்.கே. சிவாசிலிங்கம் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
கொழும்பு, கோலாலம்பூர், சென்னை என்று எமது தேசத்தின் தாயார் அலைக்கழிக்கப்பட்டார் கோலாலம்பூரில் அவருக்கு இந்தியாவில் மருத்துவம் பெறுவதற்க்கான அனுமதியும் வழங்கப்பட்டது சென்னைக்குச் செல்லும் உள்நுளைவு அனுமதியை இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களால் வழங்கப்பட்டது. சிகிச்சைக்காக சென்னை சென்ற பார்வதி அம்மாவை சென்னை விமான நிலையத்தில் வைத்தே விமானத்தை விட்டு வெளியில் வரவிடாமல் பண வெறியன் கருணாநிதியின் ஏற்பாட்டில் அவரை உள் வரவு திணைக்கள அதிகாரிகள் மீண்டும் கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்பினர்.
பின்னர் வீசா வழங்களில் தவறு நடந்து விட்டதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் மனநோயாளிகள் போல நாடகமாடினார்கள். பார்வதியம்மாளுக்கு நடந்தது பற்றித் தனக்கு ஒன்றுமே தெரியாது என்றும் கருணாநிதி கதை அளந்தார். பார்வதி அம்மா வரும் செய்தி தனக்குத் தெரியாது என்றும் தனக்கு அறிவித்துவிட்டு வந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்றும் கதை எழுதினார். எமது அன்னை இந்தியத் தூதரகத்தில் சட்டப்படி அனுமதி பெற்றே சென்னை வந்தார் அன்னையை அங்கிருந்து அழைத்துச் செய்வதற்கு தமிழின உணர்வாளர்கள் தயாராகவே இருந்தார்கள் அப்படியிருக்க உணர்வற்று உருக்குலைந்து போகக் கிடக்கும் ஜடத்திற்கு (கரினாய்க்கு)அறிவிக்க வேண்டியதன் அவசியம் தான் என்ன இருந்தது எமக்கு.
இந்த கரி நாயின் செயற்பாட்டை நியாயப்படுத்திய சுப.வீரபாண்டியன் அவர்களும் பார்வதி அம்மாள் சென்னை வருவது தொடர்பான தகவல்கள் எதுவும் தங்களுக்கு வழங்கப்படவில்லை அப்படி வழங்கியிருந்தால் தாங்கள் விமான நிலையத்தில் இருந்து தாயாரை அழைத்துச் சென்றிருப்பார்களாம். என்னய்யா தமிழ்நாட்டு சட்டம். நெடுமாறன், வைக்கோவிற்கு, ஒருசட்டம். கருணாநிதி, சுப,வீக்கு இன்னொரு சட்டமா? எந்தச் சட்டம் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும் அது அவரவர் இலாப நோக்கம் கொண்டது. ஆனால் கருணாநிதியுடன் கூட்டுச் சேர்ந்து அன்னையை தமிழகத்துக்குள் வரவிடாமல் திருப்பி அனுப்பியவர்களே தமிழீழ தேசத்தின் தாயின் இன்றைய உயிர் பிரிவுக்கும் காரணமானவர்கள். இந்தப் பழி கருணாநிதி சுப.வீரபாண்டியன் உட்பட இன்னும் பலரை சூழ்ந்து கெள்ளும்.
ஒரு நாடு பலதடவைகள் வல்லரசாகிய சனநாயக பாரத தேசத்தின் ஜனநாயகம் இதுதானா எம்மைப் பொறுத்த வரையில் பார்வதியம்மாளின் மருத்துவத்திர்க்கான பயணத்தில் தமிழக அரசு நயவஞ்சகமாகப் பழி தீர்த்துள்ளது காட்டு மிராண்டித் தனமாக நடந்துள்ளது. பாரதம் திரும்பி வரும்படி பார்வதியம்மாளை அழைத்தது. இது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதும் பனை ஏறி வீழ்ந்தவனை மாடு ஏறிமிதிப்பதும் போன்ற செயலுக்கு சமமாகும். திருப்பி அழைத்தவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நிற்க முடியாதபடி அன்னை சரியான பாடம் புகட்டிவிட்டார். அவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தாய், சுட்டெரிக்கும் சூரியனைப் பெற்ற கருவறை, தமிழ் இனத்தின் குலதெய்வம், என்னுயிர் போகட்டும் என் மண்ணில் என்று கூறி தாயின் தாயகம் வந்துவிட்டார் விட்டார்.
கயவரின் ஆளுகையில் இருக்கும் தமிழகம் செல்ல மறுத்து தன் தேசம் வந்த வீரத்தாய், பார்வதியம்மாளுக்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. உடலும் உயிரும் சோர்வுற்ற நிலையில் கொடிய நோய்களின் தாக்கத்தின் காரணமாக 20.02.2011 காலை 6.10 மணியளவில் மனித உருவில் இருந்த எம் தெய்வத்தாய் மனித உடலை விட்டுப் பிரிந்து இந்த உலகில் வாழும் தமிழர்களின் குலதெய்வமாக தமிழர் வரலாற்றில் நிலைத்துவிட்டார்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருப்பவர்களுக்கு எமது இணையம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் அவர்களின் துயரிலும் நாம் பங்கெடுத்துக் கொள்கிறோம்
தமிழீழ மக்களின் இன்றைய இக்கட்டான காலகட்டத்தின் இலங்கையின் கொடிய மனித வாழ்க்கையின் வெளிப்பாட்டைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பெற்றாரின் இறுதி கால வரலாற்றில் காணலாம் இருவரையும் செட்டிக்குளம் வர உதவியவர்கள் கூட சிங்களத்தின் சிறைகளில் சித்திர வதைகளை அனுபவிக்கின்றனர். என்றால் வஞசம் தீர்க்கும் கொடிய அரசின் உண்மைத் தன்மையை புரிந்துகொள்வது ஒன்றும் அவ்வளவு கஸ்ரமான விடையமல்ல மிகவும் இலகுவாகவே புரிந்துகொள்ள முடியும்.
அன்னையின் உயிர் பிரிவின் காரணமாக உலகத் தமிழர்கள் இன்று விழித்து எழிச்சி கொண்டு எழுந்துள்ளனர். மீண்டும் எமக்கான புனிதப்போரின் அவசியத்தை உணர்ந்து அந்த பெருந்தலைவரின் வழியில் அணிவகுக்க உலகத் தமிழர்கள் தயாராகியுள்ள இன்றைய காலகட்டத்தில் நான் பெரிது நீ பெரிது என்று போட்டிபோடும் தமிழ் உணர்வாளர்கள் ஓர் அணியில் திரள்வதற்கு எந்தவகையான முயற்ச்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பதே இன்றைய நாளில் அவர்களுக்கான கேள்வி???.
எமக்கான நேரம் நெருங்குகிறது எம் தேசியத் தலைவரை மக்கள் முன் அழைத்து வருவதற்கான முயற்ச்சிகளை நாங்கள் ஒவ்வெருவரும் தான் முன்னெடுக்க வேண்டும். ஆகவே எனது தாய் எனக்கான தாய், எமது தேசியத் தலைவரின் தாய் தமிழீழ தேசத்தின் தாய், தமிழ் மக்களின் தாய், அதனால் இன்று நடைபெறும் ஈழத் தாயின் இறுதிக் கிரிகைகளில் அன்னை பெற்ற பிள்ளைகள் இல்லை என்ற வாதத்தை தூக்கி வீசுங்கள். நாங்கள் நீங்கள் அனைவரும் ஈழத்தாயின் பிள்ளைகள்தான் ஆகவே இன்று அன்னையின் அருகில் இருக்கும் பிள்ளைகள் தங்களுடைய கடமைகளை செய்யட்டும். அன்னையின் உடலை எரியூட்டும் இன்றைய நாளில் நாங்கள் எமக்கான கடமைகளை நாம் வாழும் தேசங்களில் சரிவரச் செய்வோம் என அன்னை எரியும் நெருப்பின் மீது உறுதி எடுத்துக்கொள்வோம். இல்லையெனில் எமது ஈழத்தாய்க்கு அல்ல எம்மைப் பெற்ற தாய்க்கே பிள்ளைகளாக இருக்க நாம் தகுதியற்றவர்கள்.
தமிழீழ தேசத்தின் தாய் தந்தையருக்கான முழுமையான தமிழ் இனத்தின் கௌரவம் எமது தேசியத் தலைவரின் முன்னிலையில் உலகத் தமிழர்களால் இந்த உலகம் வியக்கும் வண்ணம் வழங்கப்படும் அப்போது உலகத் தமிழர்கள் நெஞ்சு நிமிர்த்தி தலை நிமிர்வார்கள். அதேநேரம் இலங்கை இந்தியா உட்பட உலக நாடுகள் தமது தலைகளை குனிவார்கள்.
வீரன் பிறந்த பூமியில் இன்று வீரம் பேசுகிறான் சிங்களவன், நிச்சயம் விரட்டி அடிப்பார்கள் வேலுப்பிள்ளையின் பேரமக்கள் விரைவாக!!

தி.தமிழரசன்,
ஈழம்5.இணையம்.

மாகாண சபையால் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் இல்லை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக செயற்படத் தயார் என்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து செயற்படத் தயார் என தமிழ் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் அசாதாரண சூழலுக்கு அரசாங்கமும் அரச இராணுவமும் அதனுடன் இயங்கும் குழுக்களுமே காரணம். இது தமிழர்களின் பொருளாதாரத்தை முடக்கும் இன்னுமொரு யுத்தி என தமிழ் தேசிய முன்னணி குற்றஞ் சாட்டியுள்ளது.
யாழ்ப்பாணம் 3ம் குறுக்குத்தெருவில் உள்ள தமது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே தமிழ் தேசிய முன்னணி இதனைத் தெரிவித்துள்ளது. இம் மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், வரதராஜன், மணிவண்ணன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ் குடாநாட்டில் நடைபெறுகின்ற அசாதாரண சூழலுக்கு அரசாங்கமே காரணம். தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக திட்டமிட்டு இதனைச் செய்து வருகின்றது. யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் புலம் பெயர்ந்தவர்களால் வட பகுதியில் முதலீடுகளைச் செய்து தமது வளத்தினைப் பெற்று பொருளாதார ரீதியில் முன்னேறி விடுவார்கள் என்பதற்காக திட்டமிட்டு அசாதாரண சூழலை உருவாக்கி வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதத்தால் இல்லாமல்ப் போயிருந்தாலும் அது ஜனநாயக ரீதியில் உருவாகியுள்ளது. இதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
எமது கட்சியானது ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமாகி மத்திய குழுவை உருவாக்கியுள்ளோம். இன்னும் இரண்டு மாதத்திற்குள் சிறந்ததொரு யாப்பை உருவாக்கி ஒரு நாடு இரு தேசங்கள் என்ற இலக்கை நோக்கி பயணம் செய்யவுள்ளோம். எமது ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கை ஏனைய கட்சிகள் போல் மேல்மட்டத்தில் இருந்து கருத்துக்கள் வெளிப்படாது அடி மட்டத்திலிருந்து கருத்துக்களை உருவாக்குவதே எமது குறிக்கோள். இதற்காக நாம் பல கிராமமட்ட அமைப்புக்களைச் சந்தித்து திட்டங்களை வகுத்துள்ளோம்.
காலப்போக்கில் ஏனைய அரசியல் கட்சிகளையும் இதற்குள் ஒன்றிணைப்போம். இலங்கை அரசாங்கம் இன அழிப்பை மேற்கொண்டுவிட்டு மீண்டும் எம்மை ஒடுக்குவதற்காக திட்டமிட்ட செயற்பாடுகளைச் செய்து வருகிறது.இது தொடருமாயின் எகிப்து, லிபியா நாடுகளில் நடந்தவை போலவே இங்கும் நடக்காது என்பதற்கு உத்தரவாதமில்லை. இந்த அரசாங்கம் போர்க் குற்றத்தை கதைக்காது விட்டால் தமிழ் மக்கள் பிரச்சினையைத்
தீர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக கூறிவருவதாக தெரியவருகிறது.
இதற்கு கூட்டமைப்பு இணங்கியதாகவும் தெரியவருகிறது. 13வது அரசியல்த் திட்டத்தை அமுலாக்குவதோ அல்லது வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றுவதோ, தமிழ் மக்களுக்கு தீர்வினைத் தராது. இப் 13வது அரசியல் திருத்தச்சட்டமானது ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது. இன்று இதற்குப் போட்டியிடுவதற்குப் பலர் தயார் நிலையில் இருக்கின்றனர். மாகாணசபை என்பது ஆளுனருக்கு மட்டுமே அதிகாரமுள்ளது. இதன்மூலம் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடையாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவார்களேயானால் நாமும் செயற்படத் தயார். 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூட்டமைப்பினர் பகிரங்கமாக அறிவிப்பார்களேயானால் வடக்கு மாகாண சபையில் புத்தி ஜீவிகள் மற்றும் சமூகத்தில் மதிக்கத் தக்கவர்களை அனுப்புவது தொடர்பாக கலந்தாலோசிக்க முடியுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

23 பிப்ரவரி 2011

அஸ்தி கரைப்பு முறைப்படி நடக்கும்!

தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளையின் இறுதிக் கிரியைகள் நேற்று உணர்பூர்வமாக நடைபெற்றது தெரிந்ததே. இந்த நிலையில் ஊறணிச் சுடலையில் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அன்னையின் அஸ்தி இருந்த இடத்தை நாசம் செய்து, அந்த இடத்தில் அவர்கள் வருவதை எதிர்த்த நாய்களைக்கூட சுட்டுக் கொன்று வீசியுள்ளார்கள். தமிழர்களை நாய்களைப்போல சுட்டு வீசுவோம் என்ற எச்சரிக்கை இதனால் விடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வாழும் பார்வதிப்பிள்ளையின் மகள் இறுதிக்கிரியைகளுக்கு போக முயற்சித்து அனுமதி மறுக்கப்பட்டது தெரிந்ததே. இதன் காரணமாக மாறு வேடத்தில் அவர் வருகிறாரா என்று அறிய இராணுவம் இறுதிக்கிரியைக்கு போன பெண்களை பரிசோதித்ததும் தெரிந்ததே. இந்த நிலையில் பார்வதிப்பிள்ளையின் அஸ்த்தி கரைக்கும் நிகழ்வு வழமைபோல நடைபெறும் என்று வல்வைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தாம் வல்வைக்கு தொடர்பு கொண்டதாகவும் சாம்பல்காடாத்து முறைப்படி நடக்குமென தமக்கு தகவல் கிடைத்ததாகவும் பார்வதிபிள்ளை அவர்களின் மகன் மனோகரன் வேலுப்பிள்ளை அலைகளுக்கு தெரிவித்தார் என அலைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

விஜய் நம்பியார் ஒரு போர்க்குற்றவாளி!

இரட்டைப் பிரஜா உரிமை கொண்ட பாலித கோஹனவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், புலிகளின் அரசியல் தலைவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்கள் கொலைக்கு காரணமாக இருந்த மற்றும் ஒரு நபர் விஜய் நம்பியார் ஆவார். இந்தியரான இவர் பான் கீ மூனின் பிரத்தியேகச் செயலாளரும் ஆவார். இவர் மீதும் தற்போது சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக இன்ரர் சிட்டிப் பிரஸ் தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்டப் போர் நடந்தவேளை, புலிகளின் அரசியல் தலைவர்கள் 300 காயப்பட்ட போராளிகள், குழந்தைகள், மற்றும் பெண்களோடு சரணடைந்திருந்தனர். அதில் நடேசன் உட்பட, புலித்தேவன் ரமேஷ் போன்றோர் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்தோடு காயம் அடைந்த 300 போராளிகளுக்கும் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களும் கொல்லப்பட்டே இருக்கவேண்டும் என பலர் தெரிவித்துவருகின்றனர். இந் நிலையில் புலிகள் இயக்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சரணடையும் அரசியல் தலைவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தவர் விஜய் நம்பியார். ஆனால் அது காப்பாற்றப்படவில்லை. மாறாக அனைவரும் இறந்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அன்னையின் சிதை மீது நாய்களைப்போட்டு கொளுத்திய சிங்களப்பேய்கள்!

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயாரின் சிதையின் மேல் நாய்களைப் போட்டுக் கொழுத்திய மிகக் கீழத்தரமான செயற்பாட்டில் இலங்கையில் சிங்களப்படைகள் ஈடுபட்டிருக்கின்றனர். வல்வெட்டித்துறை ஊரணியில் உள்ள இந்து மயானத்தில் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் புகழுடல் நேற்றைய நாள் தகனம் செய்யப்பட்டிருந்தது
இந்நிலையில் இன்று காலை அவரது சிதையில் இருந்து அஸ்தி எடுப்பதற்காக அவரது உறவினர்கள் சென்றிருக்கின்றனர்.
அவ்வேளை சிதையின் மீது மூன்று நாய்களின் எலும்புக்கூடுகள் எரிந்த நிலையில் அரைகுறையாகக் காணப்பட்டுள்ளன, அதேவேளை பார்வதி அம்மாளின் அஸ்தியும் அங்கிருந்து எடுத்து சிதறிய நிலையில் காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கை அரசும் அதன் படைகளும் இன்னமும் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டில் இருந்து விடுபடவில்லை என்று வல்வெட்டித்துறை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.சிங்களப்படைகளின் இந்த பேயாட்டம் உலகத் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

22 பிப்ரவரி 2011

அன்னையின் இறுதி நிகழ்வு காணொளி!

அன்னையின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயாரான பார்வதியம்மாவின் இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் அக்கினியுடன் சங்கமமாகியது.நேற்று முன்தினம் மாலை முதல் தீருவிலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு இன்று முற்பகல் 10.30 மணியளவில் வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி மயிலேறும் பெருமாள் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அஞ்சலி நிகழ்வில் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், அரியநேத்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம்,சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பலர் உரையாற்றினார்கள்.
இதனை விட இந்தியாவில் இருந்து பழ. நெடுமாறன், வை.கோபலாசாமி, சீமான் மற்றும் நோர்வேயில் இருந்து ஈழத் தமிழர் பேரவை ஆகியவர்களின் அஞ்சலி உரைகள் நேரடியாக தொலைபேசி மூலம் நிகழ்த்தப்பட்டது.
பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் அவரது மகளின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இறுதி ஊர்வலம் சுமார் 2.30 மணியளவில் வல்வெட்டித்துறை பருத்தித்துறை வீதியூடாக ஊறணி இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வீதியின் இரு மருங்கிலும் இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் வீதியில் கட்டப்பட்டிருந்த கறுப்புக்கொடிகள் பலாத்காரமாக அகற்றப்பட்டன. சுவரொட்டிகளும் கிழித்தெறியப்பட்டன.
பலதரப்பட்ட சோதனைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் மக்கள் கலந்து கொண்டமை குறைவாகக் காணப்பட்ட போதிலும் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் கலந்து கொண்டு மயானம் வரை சென்று தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்கள்.
4.30 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட புகழுடல் வல்வெட்டித்துறை ஊறணி மைதானத்தில் அவரது இரத்த உரித்தான சங்கர் நாராயணன் என்பவர் கொள்ளி வைக்க அன்னாரின் உடல் தீயுடன் சங்கமாகியது.

படை அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது தீருவிலில் ஈழத்தாயின் இறுதி நிகழ்வுகள் நடைபெறுகின்றது!

இராணுவப் புலனாய்வாளர்கள் இராணுவத்தினர் பொலிஸார் இணைந்த அச்சுறுத்தலின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்களின் தாயாரின் இறுதி நிகழ்வுகள் தீருவிலில் நடைபெறுகின்றது.
மருத்துவர் மயிலேறு பெருமாள் தலைமையில் நடைபெறும் இறுதி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் செ.கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் உட்பட்டவர்களும் பங்குகொண்டிருக்கின்றனர்.
நிகழ்வில் நினைவுரைகளை தமிழ் தேசிய ஆதரவாளர்களான பழநெடுமாறன் வை.கோ உட்பட்டவர்கள் தொலைபேசி ஊடாக நிகழ்த்தியிருக்கின்றனர்.
வடமராட்சியின் அனைத்து வீதிகளிலும் செல்வோர் அனைவரும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் இந் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டிருக்கின்றனர்.
நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் செல்வோரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சோதனைகளுக்கு உட்படு்த்தியே அனுமதிப்பதாக நிகழ்வில் பங்குகொண்டிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்னைக்கு அஞ்சலி செலுத்தவிடாமல் திருமாவளவனை திருப்பி அனுப்பியது சிங்களம்!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் அன்னை பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் குழுவினர் கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:
கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம்:
சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை ராஜபக்சே ஓர் பொருட்டாகவே மதிப்பதில்லை! - இந்திய, தமிழக அரசுகள் கடுமையாக எச்சரிக்க வேண்டும்! - தொல்.திருமாவளவன் ஆவேசம்!
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் அன்னை பார்வதி அம்மாள் கடந்த 20Š02Š2011 அன்று அதிகாலையில் வல்வெட்டித்துறை பொது மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் இன்று (22Š02Š2011) மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று (21Š02Š2011) நள்ளிரவு 12.30 மணியளவில் கட்சிப் பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வன், இளஞ்சேகுவேரா ஆகியோருடன் கொழும்பு சென்றோம்.
எமது குழுவினரை வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்தனர்.
கொழும்பு விமான நிலையத்தில் சிங்கள அரசின் குடிவரவுத் துறை அதிகாரிகள் எங்களை வழிமடக்கி, இலங்கைக்குள் நுழைய உங்களுக்கு அனுமதியில்லை. இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறினர்.
நாங்கள் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயாரின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே வந்திருக்கிறோம். வேறெதுவும் உள்நோக்கம் இல்லை. ஆகவே எங்களை அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினோம்.
அவ்வாறு அனுமதிக்க இயலாது. நீங்கள் வந்த அதே விமானத்தில் திரும்பிச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினர்.
நான் ஏற்கனவே பலமுறை இலங்கைக்கு வந்திருக்கிறேன். இந்திய நாடாளுமன்றக் குழுவிலும் ஓர் உறுப்பினராக வந்து போயிருக்கிறேன். நான் சமூக விரோதி அல்ல. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் எனக்கு மதிப்பளிக்காவிட்டாலும், இந்திய அரசுக்காவது நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். இது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட அவமானம் என்பதைவிட இந்திய அரசுக்கும், இந்திய தேசத்திற்கும் இழைக்கும் பெரும் அவமதிப்பே ஆகும். இதை இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் உரிமைப் பிரச்சினையாக எழுப்புவேன் என்றும் எச்சரிக்கை விடுத்தேன்.
மேலும் என்னையும் என்னுடன் வந்தவர்களையும் எதற்காகத் திருப்பி அனுப்புகிறீர்கள் என்பது தொடர்பாக எழுத்து பூர்வமான அறிக்கையினை அளிக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தினேன். அவ்வாறு வழங்க இயலாது என்று மறுத்ததோடு எங்களை வலுக்கட்டாயப்படுத்தி அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.
மேதகு பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமின்றி இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் அன்னையாய் விளங்கும் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அனுமதிக்காத, ஈவிரக்கமில்லாத கொடுங்கோலன் ராஜபக்சேவையும் சிங்கள இனவெறி அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அன்னை பார்வதி அம்மாள் இறப்பையொட்டி ஈழத்தில் கறுப்புக்கொடிகள் ஏற்றக்கூடாது எனவும் ஆங்காங்கே அவரின் திருவுருப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தக்கூடாது எனவும் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் இராணுவ கொடுநெறி அரசு கெடுபிடி செய்து வருகிறது.அன்னை பார்வதி அம்மாளுக்கு தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தத் துடிக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அஞ்சுகிற வகையில் ராஜபக்சேவின் இராணுவம் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கடுகளவும் கருணையில்லாத கொடூரன் ராஜபக்சேவின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கு எல்லையற்று நீண்டுகொண்டே போகிறது. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் சவால் விடுகிற வகையில் ராஜபக்சேவின் அணுகுமுறைகள் தொடர்கின்றன.
இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த இனவெறிபிடித்த கொலைவெறியன் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை ஓர் பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான என்னை திருப்பி அனுப்பியதிலிருந்தே அறியலாம்.
இந்நிலையில் இந்திய, தமிழக அரசுகள் ராஜபக்சே கும்பலைக் கடுமையாக எச்சரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
மேலும் தமிழகத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.
நேரிலே அஞ்சலி செலுத்த முடியாவிட்டாலும் அன்னை பார்வதி அம்மாளுக்கு இலட்சோபலட்சக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை தமிழகத்திலிருந்து செலுத்துகிறோம்.
இவண்
(தொல். திருமாவளவன்)
குறிப்பு: தலைவர் தொல்.திருமாவளவன் திருப்பியனுப்பப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டமும் ராஜபக்சே உருவபொம்மை எரிப்புப் போராட்டமும் நடத்துகின்றனர்.
இன்று (22Š02Š2011) காலை 11.00 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.
போராட்டத்திற்கு தொல்.திருமாவளவன் தலைமையேற்கிறார்.

21 பிப்ரவரி 2011

தமிழ் தாயொருவர் கதறியலும் காணொளி!

தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாளின் அஞ்சலியில் தமிழ்த்தாயொருவர் ஈழத்தின் சொல்லெண்ணா அவலங்களையும் சிங்களவன் காலில் தமிழன் படும் வேதனைகளையும் மனம்விட்டு கூறி கதறியழுதார்.பார்வதியம்மாளின் உடலத்திற்கு இராணுவத்தினரினதும் புலனாய்வாளர்களினதும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டும் சரளமாக காட்டுமிராண்டிகள் நின்றபோதும், எம் தேசத்து உறவுகள் பலர் தேசத்தாயின் இறுதியஞ்சலியில் மனம்விட்டு கதறியழுது தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

சரத்குமார்,கிருஷ்ணசாமி ஆகியோர் அன்னைக்கு அஞ்சலி!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது தாயார் பார்வதியம்மாள் நேற்று காலை காலமானார்.
இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
’’பார்வதி அம்மாளின் மறைவுக்காக உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் வருத்தத்தோடு கண்ணீர் சிந்தி அவரது மறைவுக்கு வீர அஞ்சலி செலுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஆர்.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
’’ஈழ விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட உலக தமிழ் மக்களின் அடையாளமாக விளங்குகிற மாவீரன் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் யாழ்பாணத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி நம்மை எல்லாம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது’’என்று கூறியுள்ளார்.

சுவாமி பிரேமானந்தா காலமானார்.

திருச்சி மாவட்டம், விராலிமலை அருகே ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா கொலை, கற்பழிப்பு வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுயநினைவை இழந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் இலங்கை மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னையின் நினைவுப்பாடல்!


சுவரொட்டி ஒட்டியதாக இளைஞர்கள் கடத்தல்!

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் பறக்கவிடப்பட்டிருந்த கறுப்புக் கொடிகள் அனைத்தினையும் அங்கு திடீரென வந்த படையினர் அகற்றியதன் காரணமாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் பதற்றம் நிலவுதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு நேற்று இரவு சுமார் 14 இளைஞர்களை புலனாய்வுப் பிரிவினர் கடத்தியுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட சில இளைஞர்களே மரங்களில் ஏறி கறுப்புக்கொடிகளைக் கட்டியதாக இராணுவத்தினர் நம்புகின்றனராம்.
இதில் சில இளைஞர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், மேலும் சிலரை இராணுவத்தினர் தடுத்துவைத்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதனைச் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.

20 பிப்ரவரி 2011

வெள்ளி விழாவில் கறை பூசிய உதயன் நாளிதழ்!

உலகத் தமிழினத்திற்கு முகவரி தந்த வீரத் தலைவனை ஈன்றெடுத்த தேசத் தாய் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களின் பிரிவு தமிழ் மக்களின் மனத்தில் ஆறாத துயரத்தினைத் தந்திருக்க யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து தமிழ் தேசிய ஊடகம் ஆண்டு நிறைவினை கொண்டாடி பூரித்திருக்கின்ற அவலமும் நிகழ்ந்தேறியிருக்கின்றது.
உதயன் பத்திரிகை தனது 25ஆவது அகவையை எட்டி நிற்கும் பொழுது அது அடைகின்ற ஆனந்தத்திலும் அதனை சார்ந்து நிற்கின்ற வாசகர்கள் அடைந்து நிற்கின்ற பூரிப்பானது எல்லையற்றது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் உதயன் சோர்ந்து விடவில்லை.
உயிர்கள் பிய்த்தெறியப்பட்ட போதிலும், அலுவலக சொத்துகள் அழிக்கப்பட்ட போதிலும் சோர்ந்து போகாத உதயன் தன் நேர்த்தியான போக்கில் இருந்து தொய்ந்து போகவில்லை.
உதயனின் ஒவ்வொரு ஆண்டுப் பூர்த்தியின் போதும் உதயனுக்காக உயிர் கொடுத்த ஊழியர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதிப்புக்களை உதயன் வெளியிடவும் பின்நிற்கவில்லை.
வெள்ளிவிழாக் கண்டு நிற்கின்ற உதயன் தனது வெள்ளிவிழா நிகழ்வின் போது, கொல்லப்பட்ட ஊடகர்களுக்கு முதலில் வணக்கம் செலுத்தியமை சிறப்பு.
ஆனால் கொல்லப்பட்ட ஊடகர்களுக்கான முதல் மாலையினை இராணுவ அதிகாரி கேணல் பெரேரா அணிவித்த போது அடுத்த மாலைகளை அணிவிக்கக் காத்திருந்த உயிரிழந்த ஊடகர்களின் பெற்றோரும் உறவினர்களும் குமுறிக்கொண்டதாக நிகழ்வில் பங்குகொண்டிருந்த உதயன் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இன்றைய நாள் வெள்ளிவிழாச் சிறப்புக்குரிய நாள் என்பது பெருமைக்குரிய விடயம் தான் ஆனால், தேசத் தலைவனைத் தந்த அன்னையின் பிரிவிற்காக இன்றைய நாளைத் தியாகம் செய்திருக்கக் கூடாதா? என்று உதயன் ஊழியர்களே நிகழ்வில் சென்றவர்களிடம் மனம் நொந்திருக்கிறார்கள்.
வல்வெட்டித்துறை அமெரிக்க மிசன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இன்று தனது பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டியினை இடை நிறுத்தியிருக்கின்றது. குறித்த பாடசாலை நிர்வாகம் உடனடியாகவே இராணுவத்தினரின் நெருக்குதலுக்கு உட்பட்டிருக்கின்றது.
அதனை விடவும் கல்விச் சமூகத்தின் உயர் மட்டத்திற்கான பதிலையும் அந்தப் பாடசாலை வழங்கவேண்டிய தேவை என்பது ஒருபுறம். அரசை சார்ந்து அல்லது அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படும் ஒரு பாடசாலையே தனது விளையாட்டுப் போட்டியினை இடை நிறுத்துகின்ற போது தமிழ் தேசியத்தினைச் சொல்லிச் சொல்லியே 25 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் உதயன் பத்திரிகையும், தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு பத்திரிகையின் ஸ்தாபகர் என்ற அடிப்படையில் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களும் சரியான முடிவினை இன்றைய நாளில் எடுத்திருக்க வேண்டும்.
நிகழ்விற்கான கௌரவ விருந்தினர்களாக யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துரசிங்கவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரும் குறிப்பிடப்பட்டு அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டமையை காரணமாகக் காட்டி நிகழ்வினை இடை நிறுத்த முடியாது என்று கூறலாம். அவ்வாறாயின் தேசியம் எனச் சொல்லிக் கொள்வது எதனை? தேசியத்திற்காக கொடுக்கப்பட்ட அதி உயர் விலைகளுக்கு ஈடாக கௌரவ விருந்தினர்கள் குறித்த நிறுவனத்தால் கருதப்படுகின்றார்களா? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் என்ன?. எந்த இராணுவத்தால் தலைவர் அவர்களின் தந்தையாரும், தாயாரும் நிரந்தர நோயாளிகளாக்கப்பட்டு உயிரிழப்பு வரையில் அவர்களைத் தள்ளும் நிலை ஏற்பட்டதோ அதே இராணுவத்தின் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு மரியாதை கொடுக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதேவேளை உடலத்தை பொறுப்பேற்கவோ அதனை பார்வையிடவோ முடியாத அளவிற்கு வல்வெட்டித்துறை வைத்தியசாலையினை முற்றுகையிட்டு இராணுவம் நிலை கொண்டிருக்கின்றது. வைத்தியசாலையின் ஒதுக்குப்புறமான அறை ஒன்றில் அனாதை போல வீரத் தலைவனின் தாயாரின் உடலம் வைக்கப்பட்டிருக்கின்ற அவலம் உதயன் பத்திரகை நிறுவனத்திற்கு தெரியாதா?
தற்போது அரசியல் நீரோட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளும் சரி, ஊடக நிறுவனங்களும் சரி தமிழீழ விடுதலைப் புலிகளை தவிர்த்து அல்லது விலக்கி நின்று கொண்டு செயற்பட முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை.
உதாரணமாக அண்மையில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்குப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளே இருப்பதாக தாம் கருதுவதாக உதயனின் தொடக்கம் முதல் கடந்த ஆண்டுவரை ஆசிரியராகப் பணியாற்றிய திரு வித்தியாதரன் அவர்களே குறிப்பிட்டிருக்கின்றார். இன்றுவரையில் கூட விடுதலைப் புலிகளை விலக்கி அரசியல் செய்யவோ ஊடகத்தில் எழுதவோ முடியாத நிலை என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.
இவ்வாறான போக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அளவிடமுடியாத அர்ப்பணிப்புக்கள், உயிர்கொடைகள், தியாகங்கள் எல்லாவற்றுடனும் சேர்ந்தே பயணிப்பதாகக் காட்டிக்கொண்ட உதயன் இன்றைய நாளில் இத்தனை பெரிய உலகம் வியந்த விடுதலை அமைப்பை கட்டி வழிநடத்திய ஒரு தலைவனை ஈன்ற தாயைப் பற்றி ஒரு வார்த்தையேனும் தனது நிகழ்வின் போது சொல்லியிருந்தால், அவருக்காக ஒரு நிமிடம் மௌன வணக்கம் செலுத்தியிருந்தால் குற்றம் சாட்டுவதில் நியாயம் இருந்திருக்கப் போவதில்லை.
அவ்வாறாயின் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு என்ன கறிவேப்பிலையா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. விடுதலைப்புலிகளை தமது தேவைகளுக்காக தமது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தும் போக்கு என்பது கைவிடப்பட வேண்டும். இல்லை, அவ்வாறுதான் இருப்போம் என்றால் சொல்வதுடன் மட்டும் நின்றுவிடாது செயலிலும் காட்ட வேண்டும்.
இன்றைய நாளில் உதயனும் அதன் நிர்வாகமும் விட்டிருக்கின்ற வரலாற்றுத் தவறினை எந்த வகையில் நியாயப்படுத்திக் காட்டப் போகின்றனர் என்பதை எதிர்பார்த்து நிற்கின்றது தமிழினம்.
சரிதம் ஆசிரிய பீடம்.
நன்றி:சரிதம்.

அன்னையின் நிகழ்வுகளை சிங்களப்படை கண்காணிக்கிறது!

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தாயார் ஈழத்தாய் பார்வதி அம்மாளின் மரண அஞ்சலியில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு விடயத்தையும் புலனாய்வுப் பிரிவினர் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
யாழ். வடமராட்சியில் வல்வெட்டித்துறை பிரதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சிவில் உடையிலும், சீருடையிலும் இராணுவத்தினர் கண்காணிப்புக் கடமைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
வே.பிரபாகரன் என்கிற சொல்லை பயன்படுத்துகின்றமையை இராணுவத்தினர் முழுமையாக தடை செய்து உள்ளார்கள்.
அத்துடன் வே.பிரபாகரனின் தாயார் காலமானார் என்கிற தலைப்பில் வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பொதுமக்களைக் கொண்டு அகற்றியும் இருக்கின்றனர்.
இதே நேரம் பார்வதி அம்மாளின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக மாலை 5.00 மணி முதல் வைக்கப்பட்டு உள்ளது.
நாளை மறுதினம் மாலை 4.00 மணிக்கு வல்வெட்டிதுறை ஊரணி பொதுமயானத்தில் இறுதி வணக்க நிகழ்வுகள் இடம்பெற உள்ளது.

அன்னையின் இறுதி நிகழ்வை இன்றே நடத்துமாறு படை அச்சுறுத்துகிறது!

தேசத்தின் அன்னை பார்வதியம்மா அவர்களின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று 2 மணியிலிருந்து 4 மணிவரைக்கும் வல்வெட்டித்துறை ஊரணி(தீருவில்) பொது மயானத்தில் நடைபெறும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஈழதேசம் இணையத்திடம் சற்று முன் தெரிவித்திருந்த நிலையில் அங்கு வந்த ராணுவத்தினர் தேசத்தின் அன்னையின் உடலை இன்றே தகனம் செய்யவேண்டும் என்று எச்சரிப்பதாக எமது விசேட செய்தியாளர் சற்று முன் எமக்கு தெரிவித்துள்ளார் என ஈழ தேசம் இணையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வரை தேசத்தின் அன்னை பார்வதியம்மா அவர்களின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ராணுவத்தினர் திட்டமிட்டு இவ்வாறு எச்சரிக்கைகளை விடுத்துவருவதாக தெரியவருகிறது.
வல்வெட்டித்துறை உட்பட தமிழீழமே இன்று ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளதோடு ராணுவத்தினரின் கெடுபிடிகளை பொறுட்படுத்தாமல் மக்கள் அலையலையாக சென்று தேசத்தின் அன்னைக்கு கண்ணிர் அஞ்சலியை செலித்திவருவது குறிப்பிடத்தக்கது.

கனடியத் தமிழர் பேரவை வணக்க அறிக்கை!

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா இன்று காலை 6.30 மணிக்கு தமிழீழம் வல்வெட்டித்துறையில் தனது 81 வது அகவையில் காலமானார் என்பதனை மிகவும் வேதனையுடன் உலகத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
உலகத் தமிழரை உலகிலே தலை நிமிர வைத்த எங்கள் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை இத்தரணியிலே ஈன்றெடுத்த புனிதத்தாயின் உயிர் இன்று உலகைவிட்டுச் சென்றாலும் தமிழினம் உள்ளவரை எல்லோருடைய நெஞ்சங்களிலும் என்றுமே வாழ்ந்துகொண்டிருப்பார்.
அன்னாரது குடும்பத்தினருக்கும் பார்வதியம்மாவின் மறைவுச் செய்தி கேட்டுத் தாங்கொணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் உலகத் தமிழர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையினர் தங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் தாங்களும் இத்துயரில் பங்குகொள்கின்றனர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
கனடியத் தமிழர் தேசிய அவை.

உலகத்தமிழ் மக்கள் பெரும் துயரில் மூழ்கினர்!

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதிப்பிள்ளை(பார்வதியம்மா) அவர்கள் இன்று காலை காலமானார் என்பதை மிக மன வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழீழத்தாய் இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.
வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அவர் வந்த விமானத்திலேயே மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது.
பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்த போதில் அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை.
இதனால், பார்வதி அம்மாள் அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
தமிழீழ தேசத்தின் மகா அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இறையடி எய்தினார்
எமது தேசியத் தலைவர் மேதகு திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் உங்களுக்கு அறியத் தருகின்றோம். வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்துவளர்த்து ஆளாக்கிய அத் தேசத்தின் மகா அன்னையை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் அனைவரும் நினைவு கூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் ஈழமக்களின்அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பியபின் முதல்வருக்கு தேசியத் தலைவரின் அன்னை எழுதிய கடிதம் பக்கம் இரண்டு - இந்தக் கடிதத்தில்கூட தான் திருப்பி அனுப்பப்பட்டதை தவறாக நினைக்காமல் நீங்கள் நீடுடி வாழவாழ்த்துகின்றேன் என்று வாழ்த்திய மாசற்ற மனம் கொண்ட தாய் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

19 பிப்ரவரி 2011

தமிழக மீனவர்களை கொல்ல ஸ்ரீலங்கா நியமித்துள்ள புதிய கடற்படை அதிகாரி!

தமிழக மீனவர்களை தாக்கியழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசு புதிய கடற்படை அதிகாரி ஒருவரை வடபகுதிக்கு நியமித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று இன்று (19) தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக மீனவர்களை தாக்கிஅழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசு புதிய கடற்படை அதிகாரி ஒருவரை அண்மையில் வடபகுதிக்கு நியமித்திருந்தது.
இந்த அதிகாரியின் உத்தரவுக்கு அமைவாகவே அண்மையில் மூன்று தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், இந்த வாரம் 136 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கைக்கான உத்தரவுகளை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உயர் மட்ட அதிகாரி ஒருவரே வழங்கியிருந்தார்.
ஆனால் தமிழக மீனவர்களை நெருக்கடிக்குள் தள்ள முனைந்த சிறீலங்கா அரசு பெரும் அவமானத்தை சந்தித்துள்ளதுடன், நெருக்கடியையும் சந்தித்துள்ளது. சிறீலங்கா மீனவர்கள் நால்வர் இந்திய கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவ் சிறீலங்கா வந்துசென்ற நிலையில் சிறீலங்கா அரசு தனது உத்திகளை மாற்றி மீனவர்களை கைது செய்துள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 85 சிறீலங்கா மீனவர்களில் 21 மீனவர்களையும், 5 படகுகளையும் இந்தியா இன்று (19) விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட,கிழக்கிற்கு காவல்துறை அதிகாரம் கேட்கும் ஆனந்தசங்கரி!

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண காவல்துறை அலகொன்றை அமைப்பதற்கு சட்டத்தில் இடமிருந்த போதிலும் அரசாங்கம் அதனை உருவாக்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரம் அவசியமில்லை என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ள போதிலும் அதனை ஒர் தனிப்பட்ட நபரின் கருத்தாகவே கருத வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மக்கள் சோதனைச் சாவடிகளில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை மா அதிபரே நாட்டின் காவல்துறைக்கு தலைவராக திகழுவார் எனவும், மாகாண காவல்துறை அலகுகளை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குமரன் பத்மநாதனின் நடவடிக்கைகள் குறித்து ஆனந்தசங்கரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மீளவும் வன்முறைகளைத் தூண்டக் கூடிய செயற்பாடுகளில் குமரன் பத்மநாதன் இறங்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டால் போர்க் குற்றச்சாட்டு விலக்கப்படுமாம்!

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படும் பட்சத்தில் அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் போர் மீறல் குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேட்டின் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆலோசனைக்கு அமையவே இந்நகர்வு மேற்கொள்ளப்படுவதாகவும் இக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது அறிந்ததே.
இப் பேச்சுவார்த்தைக்கு மாற்றாக அரசாங்கத்திற்கு எதிராக எழுப்பப்படும் போர் மீறல் குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்ளுமாறு ஆரம்பத்தில் அரசாங்கத்தினால் கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனாலும் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் பட்சத்தில் இந் நிபந்தனையை ஏற்பதற்கு கூட்டமைப்பு உடன்பட்டுள்ளதாகவும் இக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர் மீறல் குற்றச்சாட்டுக்காக பணிய வைப்பதை விட அதிகாரப் பரவலாக்கல் வழங்குவதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டுமென அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் துணைச் செயலர் தெரிவித்திருந்தார்.
எவ்விதமான சர்வதேச போர் குற்ற விசாரணைகளுக்கும் ராஜபக்ச அரசாங்கம் அனுமதி வழங்கப் போவதில்லை. இப் புறநிலையில் எல்லோரும் இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்ற போர் குற்றங்களிலும், அதற்குரிய பதில் சொல்லும் பொறுப்புக்கள் மற்றும் தண்டனைகளிலும் அதீத கவனத்தைச் செலுத்துவது நடைமுறைக்கு மாறானதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
போர் மீறல் குற்றங்களை ஆயுதமாகப் பயன்படுத்துவதன் மூலம் ராஜபக்ச அரசாங்கத்தை ஒரு அரசியல் தீர்வுக்கு இட்டுச் செல்வதற்கு அழுத்தம் கொடுப்பதே அமெரிக்காவின் புதிய மூலோபாயமாகவுள்ளது.
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தைக்கு ஒத்துக்கொண்டிருந்தார். அரசியல் தீர்வைக் காணும் வகையில் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தைகளை நடத்துமாறு இந்தியா பல சந்தர்ப்பங்களில் மகிந்த ராஜபக்வைக் கோரி வந்துள்ளது.
ஆனால் மகிந்த அரசாங்கம் அது சார்ந்த எதுவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. பிரித்தானியப் பயணம் தோல்வியில் முடிந்ததை அடுத்தே முதன் முதலாக கூட்டமைப்புடன் ஜனாதிபதி மகிந்த பேச முன்வந்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் போதிய முயற்சிகளை எடுக்கவில்லை என்று தனது தமிழ் நாட்டுக்கான பயணத்தின்போது ராகுல் காந்தி குறிப்பிட்டமையும் மகிந்த த.தே.கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
போர் குற்றங்களுக்கான பொறுப்புக்களைக் கண்டறிவது தொடர்பில் ஐ.நாவினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கைகளைக் கையளிக்கப்படுவதற்குரிய காலக்கெடு அறிவிக்கப்பட்டமையும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதற்குரிய மற்றோர் காரணம் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரும் சந்திக்க முடியாத வகையில் ஐயாயிரம் போராளிகள் தடுப்பு முகாம்களில்!

இலங்கையில் யுத்தம் முடிவுற்று 21 மாதங்களாகிய பின்னரும் முன்னாள் போராளிகள் என சந்தேகிக்கப்படும் சுமார் 5,000 பேர் முகாம்களில் உள்ளதாக ஐ.நாவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி போராளிகள் ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அணுகப்பட முடியாத வகையில் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரநிதி நீல் புஹ்னே கூறியுள்ளர்.அதேவேளை கண்ணிவெடிகள் காரணமாக மேலும் 18000 தமிழர்கள் நலன்புரி முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் புஹ்னே தெரிவித்துள்ளார்.

18 பிப்ரவரி 2011

தேசியத் தலைவரும் மகாத்மாவும் சந்தித்தால்...!

காமாரஜர் வாழ்க்கையைப் படமாக்கி, பெரும் பாரட்டுப்பெற்ற இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் அவர்கள் தற்போது “முதல்வர் மகாத்மா” என்ற படத்தை இயக்கியுள்ளார். இன்றைய சூழலில் காந்தி மீண்டும் பிறந்து வந்தால் என்ன நடக்கும் என்பதை கருவாக வைத்து முதல்வர் மகாத்மா படம் உருவாகியுள்ளது. இன்றைய இளையோர்களோடு காந்தி எவ்வாறு பேசுவார், அவர்களை எவ்வாறு வழி நடத்துவார் என்பதும், மற்றும் இன்றைய அரசியல்வாதிகளோடு அவர் எவ்வாறு காய்நகர்த்துவார் என்பதும் படமாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அவரைச் சந்தித்த தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை காந்தியடிகள் எவ்வாறு கையாள்வார். மற்றும் தமிழீழப் போராட்டம் குறித்து காந்தி என்ன நினைத்திருப்பார் என்பது போன்ற காட்சிகளும் இப்படத்தில் பதிவாகியுள்ளது. கடற்கரை ஒன்றில் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது மெய்ப்பாதுகாப்பாளர்களோடு நிற்பதுபோலவும், அவரை காந்தியடிகள் வந்து சந்தித்து பேசுவதுபோலம், ஒரு கட்டத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் கையில் இருக்கும் துப்பாக்கியை அவர் வாங்கிப் பார்வையிடுவதுபோலவும் காட்சிகள் தத்துரூபமாகப் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படம் வெளிவர இருக்கும் நிலையில் தணிக்கைக்குழு, இக் காட்சிகளைத் தணிக்கைசெய்வதற்குப் பதிலாக முழுப்படத்தையும் தடைசெய்துள்ளது. இதனை அடுத்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேர்கொண்ட குழு ஒன்று இப் படத்தைப் பார்த்து, தடையை நீக்கியுள்ளதோடு, தேசிய தலைவர் பிரபாகரன் வரும் காட்சிகளையும் அனுமதித்துள்ளனர் எனவே இப் படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

யாழ் மீனவர்கள் இந்திய மீனவர்களால் சிறைப்பிடிப்பு!

யாழ். குருநகரைச் சேரந்த மீனவர்கள் நால்வர் இன்று அதிகாலை இந்திய மீனவர்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் சங்கங்களில் சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்துள்ளார்.அதேவேளை யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து 3 படகுகளில் கடற்றொழிலுக்கெனப் புறப்பட்டுச் சென்ற ஆறு பேர் இதுவரை கரை திரும்பாததனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அம்மீனவர்கள் ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று மாலை முதல் அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும் இது வரை அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.சதீஷ்குமார் தெரிவிகத்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்>
குருநகரைச் சேர்ந்த பிரான்ஸிஸ் (வயது 60), பாஸீஸியஸ் (49), இராஜலிங்கம் (59), அருள்ராஜ் (33) ஆகிய நான்கு மீனவர்களும் இன்று அதிகாலை மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்தனர்.
இவர்களின் படகு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் இந்திய எல்லைக்கு நுழைந்தபோது அங்கு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் இந்நால்வரையும் மடக்கிப் பிடித்து கரையோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் நால்வரும் தற்சமயம் மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு மீனவ சங்கத்தின் தலைவர் எனக்கு அறிவித்துள்ளார்.
இவர்களை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தார்.

யாழில் வெடிபொருட்களுடன் பார ஊர்தி!

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் பார ஊர்தியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசார் இன்று அறிவித்துள்ளனர்.பொலிசாரால் கைப்பற்றப்பட்ட பிரஸ்தாப பார ஊர்தியில் ஜெலிக்நைட் குச்சிகள் 115ம் டெட்டனேட்டர்கள் 90ம் இன்னும் பல வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்களிலிருந்து மேலும் தெரிய வருகின்றது.
வெடிபொருட்களை எடுத்துக் கொண்டு பார ஊர்தியொன்று பயணிப்பதாகக் கிடைத்த தகவலொன்றையடுத்தே பொலிசார் அதனைச் சோதனையிட்டுக் கைப்பற்றியுள்ளனர்.
பார ஊர்தி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அதன் சாரதி மற்றும் உரிமையாளர் ஆகியோரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது.

கலைஞர் தொலைக்காட்சி நிலையம் சல்லடை போட்டு தேடுதல்!

ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் ரி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் நுழைந்து அதிரடியாக சோதணை நடத்தினர். நள்ளிரவு முழுவதும் நடந்த இந்த சோதணை மூலம் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலித்து நிர்வாக உறுப்பினர்களிடம் கேள்விக்கணைகள் மூலம் துளைத்தெடுத்து வருகின்றனர்.
மத்திய அமைச்சராக இருந்த ராஜா 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற்றதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை வந்ததையடுத்து ராஜா மற்றும் அதிகாரிகள் ஸ்வான் நிறுவன உரிமையாளர் ஷாகித்உஸ்மான்பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அனைவரும் திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களாக நடத்திய விசாரணையில் வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்தாகவும், பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் சி.பி.ஐ, தனது விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
இந்நிலையில் ஸ்வான் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டதில் அந்நிறுவனம் ஆயிரத்து 537 கோடிக்கு வாங்கிய சில மாதங்களிலேயே 4 ஆயிரத்து 200 கோடிக்கு விற்று கொள்ளை லாபம் பெற்றது. இத‌ைனை தொடர்ந்து இந்த நிறுவனத்திற்கும் கலைஞர் டி.விக்கும் இடையில் பண பரிவர்த்தனை நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது ஸ்வான் நிறுவனத்தின் மற்றொரு கிளை அலுவலகம் மூலம் 200 கோடி வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.