27 ஜனவரி 2011

மீண்டும் தமிழர்களுக்கு ஆப்பு வைக்க முயல்கிறார் எரிக் சொல்கைம்!

புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ இராச்சிய உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பக்கச்சார்பாக தாம் செயற்பட்டதாக இலங்கையிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதிலும், அதில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களின் மூலம் இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனித் தமிழீழ கோரிக்கைக்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் மூலம் ஜனநாயக அடிப்படையில் புலம்பெயர் தமிழர்கள் தமது இலக்குகளை அடைய முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்த இறுதித் திகதிகள் இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியதாகவும், இந்த பாதிப்புக்களுக்கு இரு தரப்பினரும் பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் வேறும் வழியைத் தெரிவு செய்திருந்தால் பிரச்சினைக்கான தீர்வு முடிவில் மாற்றம் கண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தியில் ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்குவதற்கு நோர்வே விரும்புவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த குறுகிய பிரத்தியேக செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 கருத்து:

  1. ஒரு முறை ஏமாற்றி கெட்டழிந்த்தது போததென இப்போது புலம் பெயர் தமிழ உறவுகளையும அழிக்க சிஙகள இனவெறி கொலைவெறியருடன் சதி தீட்டுகிறரோ இந்த சமாதான வெள்ளை நரி.

    பதிலளிநீக்கு