01 ஜூன் 2011

யாழ்ப்பாணத்தில் இருந்தும் பெல்ஜியத்திற்கு பிரதிநிதிகள் வருகை.

ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவுள்ள விவாதத்தில் பங்கு கொள்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், தலைவர் வரதராஜன், உறுப்பினர் மணிவண்ணன் ஆகியோர் பெல்ஜியம் சென்றடைந்திருக்கின்றனர்.
நாளைய நாள் பிரஸ்சல்ஸ் நகரில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டு அமைப்புக்களின் கூட்டத்தில் ம.தி.மு.க வின் பொதுச் செயலாளர் வை.கோ உரையாற்றுவதற்காக நேற்றைய நாள் சென்றிருந்தார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அமைப்பு, ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து விவாதிக்க குறித்த கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கின்றது. இந்தக் கூட்டம் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்சல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் இக் கூட்டத்தில் பங்குகொள்ளவுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தர்கள் அங்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக