07 ஜூன் 2011

புலம் பெயர் தமிழர்களுக்கு தமிழே தெரியாதாம்,மகிந்தவின் கிண்டல்.

நேற்று முந் தினம் கொக்காவில் தொலைத்தொடர்பு நிலையத்தைத் திறந்து வைத்துப் பேசிய மஹிந்த ராஜபக்�ஷ, புலம்பெயர் தமிழர்களுக்கு சவால் விடுத்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து குரல்கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் கூட தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தயார் இல்லை, இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக ஒரு தனித்த டொலரைக் கூட அவர்கள் நன்கொடை அளித்ததில்லை என்று அவர் அங்கு புலம்பியுள்ளார். �புலம்பெயர் தமிழர்களுக்கு கொழும்பில், கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில் வீடுகள் உள்ளன.
அவர்களுக்கு சென்னை, ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்காவிலும் வீடுகள் உள்ளன. அவர்கள் ஆங்கிலத்தைப் பேசி தமக்காக நிதியைச் சேகரிக்கிறார்கள். இவர்களில் பலர் தமிழ் பேசுவதில்லை. எனக்குத் தெரிந்த அளவுக்குக் கூட அவர்களுக்குத் தமிழ் தெரியாது. ஆனால் தமிழ் புலம்பெயர்வாளர்களுக்கு நிதி சேகரிப்பதில் திறமையானவர்கள்� என்றும் மஹிந்தவின் உரை நீண்டுள்ளது.
சேகரிக்கப்பட்ட நிதிகள் தமிழர்களுக்கு உதவுவதற்குப் பயன்படுத்தப்படாமல், தவறான தகவல்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் தமிழர்களுக்கும் மற்ற சமூகங்களுக்கும் இடையில் பிரிவுகளைக் கொண்டுவரவும் உதவுகின்றன என்று கூறியுள்ள மஹிந்த, இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு இலங்கையிலுள்ள தமிழர்கள் திறமைசாலிகள் என்று கூறியுள்ளார். அதாவது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் அமைப்புகளும், சேகரிக்கும் பணம் ஈழதில் உள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக இல்லை என்ற தொணியில் இவர் பேச்சு அமைந்துள்ளதோடு, புலம்பெயர் தமிழர்களையும் ஈழத்து உறவுகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தும் உள்நோக்கத்தில் இவர் உரை அமைந்திருந்த்தும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இதெல்லாம் நடந்துகொண்டு இருக்க, சயிக்கிள் காப்பில் முந் நாள் பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் மகிந்தரைக் கட்டிப் பிடிக்க முயல, அப்படியே லாவகமாக அதனைத் தள்ளிவிட்ட படி மகிந்தர் லேசாக அங்கிருந்து விலகும் காட்சிகள் கூட வீடியோவில் பதிவாகியுள்ளது. மகிந்தரை ஒருக்கா கட்டிப் பிடிக்காமல் சிவநாதன் கிஷோர் தூங்கமாட்டார் போலும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக