18 ஜூன் 2011

கனடியத் தமிழர் பேரவை என்.டி.பி கட்சியுடன் தமிழர் பிரச்சனை குறித்து பேச்சு.

கனடிய எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு யக் லேற்றன் (Hon. Jack Layton) அவர்களுடன் கனடியத் தமிழர் பேரவை இன்று வன்கூவரில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டது. இச் சந்திப்பின் போது சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட விவரணக் காணொளி தொடர்பாகப் போர்க்குற்ற விசாரணைகள் சிறி லங்காவில் நடைபெற வேண்டிக் கனடியப் பாராளுமன்றத்தில் தகுந்த நடவடிக்கையை வரும் நாட்களில் எடுக்கப் போவதாக அவர் கனடியத் தமிழர் பேரவைக்கு உறுதியளித்தார். மாண்புமிகு யக் லேற்றன் அவர்கள் தமிழ் சமூகத்தின் ஆதரவாளராக எப்போதுமே இருந்து வருகிறார்.
வன்கூவரில் இடம்பெறும் என் டி பி கட்சியின் தேசிய மாநாட்டில் சிறி லங்கா தொடர்பான பிரேரணை ஒன்றை அங்கீகரிக்க வேண்டி கனடியத் தமிழர் பேரவை மேலும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என் டி பி கட்சியின் தேசிய மாநாடு இன்றும் நாளையும் வன்கூவரில் நடைபெறுகிறது.
போர்க்குற்ற விசாரணையை ஆதரிக்கக் கோரி கனடியத் தமிழர் பேரவை கனடாவின் அனைத்து அரசியற் கட்சிகளின் உதவியையும் பெறும் நோக்கிற் தொடர்ந்தும் பேசி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக