05 ஜூன் 2011

ஜெர்மன் தூதுவர் விதிமுறைகளை மீறி செயற்படுவதாக கோத்தபாய தெரிவிப்பு.

இலங்கைக்கான ஜெர்மனிய தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் இராஜதந்திர விதிமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவம் தொடர்பில் ஜெர்மனிய தூதுவர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில், பாதுகாப்புச் செயலாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜெர்மனிய தூதுவரை உடனடியாக சந்தித்து இது தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எதிர்ப்பை வெளியிட வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக எதிர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்களினால் எதிர்காலத்தில் ஜெர்மனியர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயங்குவார்கள் என ஜெர்மனிய தூதுவர் இரண்டு பக்க கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவம் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் மன்னிப்பு கோருவதாக ஜெர்மனிய தூதுவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக