24 ஜூன் 2011

இனப்படுகொலை தொடர்பான மகாநாட்டை நிராகரித்த மாவை சேனாதிராஜா.

இலங்கை இனப்படுகொலை தொடர்பான மகாநாட்டிற்கு தாயகத்திலிருந்து தமிழர் பிரதிநிதிகளை பங்குபற்ற வைக்கும் நோக்குடன் மகாநாட்டின் ஏற்பாட்டாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான மாவை சேனாதிராஜா அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு இக்குறிப்பிட்ட மாநாட்டில் பங்குபற்றமாறு கோரியிருந்தனர்.
தமிழ் மக்களால் ஜனநாயக முறையில் தமது அரசியல் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் பங்குபற்றி கருத்தக்களை தெரிவித்தால் சிறப்பாக இருக்கும் எனும் நோக்குடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைப்பதற்காக மாவை சேனாதிராஜா அவர்களுடன் தொடர்பை மேற்கொண்ட ஏற்பாட்டாளர்களுக்கு மாவை அளித்த பதில் பெரும் ஆச்சரியத்தை கொடுத்ததாக தெரியவருகிறது. எனக்கு வேறு அலுவல்கள் இருப்பதால் என்னால் இம் மாநாட்டிற்கு வர முடியாது எனவும் வேறு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவதாயின் கட்சி குழு கூடியே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்து விட்டார். இலங்கையில் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினை தொடர்பான மகாநாட்டை விட மாவை சேனாதிராஜாவிற்கு வேறு என்ன முக்கிய அலுவல்கள் இருந்திருக்கம் என்பது ஆச்சரியத்துக்குரியதொன்றாகும்.
ஐரோப்பிய பாராளுமன்றக் கட்டடத்தில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக மகாநாட்டிற்கு கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பில் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கமா என்பதும் ஆச்சரியத்துக்குரிய விடயமாகவே இருக்கும்.
இம் மகாநாட்டில் தமிழ் நாட்டிலிருந்து வைக்கோ, தாயகத்திலிருந்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் பலர் பங்கு பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக