09 ஜூன் 2011

தமிழீழத் தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் தடை இல்லை.

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடை இல்லை என்பது சட்டரீதியான உண்மை. இவ்வாறு பிரித்தானியாவில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணிகள் குழு உறுதி செய்து அறிக்கை வழங்கியுள்ளது.
பிரித்தானியாவின் அதிகாரங்களுக்கு உட்பட்ட வேல்ஸ், ஸ்கொட்லாண்ட் மற்றும் நோதர்ன் அயர்லாந்து என எந்த பகுதியிலும் தமிழர்களின் தேசியக் கொடிக்கு தடை ஏதும் இல்லை என்பதும் தேசியக் கொடி வைத்திருந்தால் கைதுசெய்து தண்டனைக்கு உட்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ஆனால் போராட்டங்களில் காவல்துறையும் ஆதரவு தரவேண்டுமானால் தேசியக் கொடியை அனைத்துவிதமான போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் முன்னிலைப்படுத் வேண்டும் என்பதோடு தமிழர் அமைப்புக்கள் ஊடாக அதை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் சட்டத்தாரணிகள் குழுவினரால் சிறந்த யோசனைகளும் முன்வைக்கப்பட்டது.
இது பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட கொடி என்றால் அதை கண்டிப்பாக பி.பி.சி குறிப்பிட்டிருக்கும். தடைசெய்யப்பட்ட கொடியை ஒருவர் தாங்கி நிற்பதை பிரித்தானியாவின் தேசிய ஊடகம் ஒளிபரப்பி இருக்காது. ஆனால் சிங்கள அரசின் கைக்கூலிகள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அமர்ந்துகொண்டு புலிகள் வேறு மக்கள் வேறு இது தமிழர்களின் கொடி அல்ல என வாதிடுகின்றார்கள்.
தமிழீழத் தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் சட்டரீதியான தடைகள் ஏதுவும் இல்லை. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. தமிழீழத் தேசியக்கொடிக்கு பிரித்தானியாவில் தடை என்று சில சிங்கள அரசின் கைக்கூலிகள் தொலைக்காட்சிகளில் புலம்பெயர் தமிழர்களை உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்த முனைகின்றார்கள். தேசியக் கொடிக்கு தடை ஆகவே அதை பிடிக்கக்கூடாது என்பதே சிலரது வாதம். சிலரது வாதம்தானே பிறகு ஏன் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்கலாம் என்ன செய்வது அந்த சிலர்தானே சில பல பொறுப்புகள் வகிக்கின்றார்கள் ஆகவேதான் பதில் கூறுகின்றோம்.
தேசியக் கொடிக்கு தடை என்பது சிலரது வாதம் தேசியக் கொடி கொண்டு போராடினால் காரியம் நடக்காது என்பது சிலரது வாதம் ஆனால் அந்த சிலர் இரண்டு வாதங்களையுமே முன்வைக்கின்றார்கள்.
சீனாவில் மாவோவின் செங்கொடிக்காகவே இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்படார்கள். செங்கொடிளை கண்டால் மறு பேச்சுக்கு இடமில்லை கொல் என்பதே அரசாங்க உத்தரவு. சிகரங்கள் போல் பிணங்கள் குவிந்த போதும் செங்கொடி மட்டும் இறங்கவே இல்லை. இறுதியாக உலகை ஆட்டிப்படைக்கும் நாடாக சீனா உயர அந்த செங்கொடியே காரணமாக அமைந்தது இது வரலாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக