18 ஜூன் 2011

தனி ஈழமொன்றே நிரந்தரத் தீர்வு என கருத்துக் கணிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ கோரிக்கை தொடர்பில் சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கச்சதீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
81 சதவீதம் பேர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர். பாராளுமன்றத்தில் இலங்கை தலைவரை போர் குற்றவாளி என தீர்மானம் கொண்டுவர 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக