30 ஜூன் 2011

இலங்கை சட்டத்தரணிகள் பேரவையின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு.

இலங்கை சட்டத்தரணிகள் பேரவையினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சர்வதேச சட்டத்தரணிகள் பேரவை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு நியமனத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் பேரவை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
எனினும், இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியத்தல்ல என சர்வதேச சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமை, சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநயாகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக குரல் கொடுப்பதே சட்டத்தரணிகள் பேரவையின் கடமையாகும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை சட்டத்தரணிகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டுள்ளனவா என விசாரணை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கும் நோக்கில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமை விவகாரத்தில் சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்து காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை சட்டத்தரணிகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக