28 ஜூன் 2011

தம்முடன் சேர்ந்து பொய்யுரைக்க தமரா குணநாயகத்திற்கு பதவியுயர்வு.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான தமரா குணநாயகம் என்பவர் ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இந்த விடயம் குறித்து முறைப்பாடு செய்வதற்கு ஜெனீவா செல்லும்போது. அங்கு சென்ற அவர் தமரா குணநாயகத்துடனேயே தங்கி இருந்து தனது பணிகளை மேற்கொள்ளுமளவுக்கு நம்பிக்கையும் சினேகமும் உள்ளவரென தெரியவருகிறது.
கியூபாவிலுள்ள சிறிய இலங்கைத் தூதரகத்தில் சிறிலங்கா தூதுவராகத் தற்போது கடமையாற்றி வரும் தமரா குணநாயகம் தற்போது மிக முக்கியத்துவமிக்க தூதுவர் பதவிக்கு ஜனாதிபதி மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ளதனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. இவர் 1970 ஆம் ஆண்டுகளின் போது இலங்கையில் செயற்பட்டு வந்த மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் உறுப்பினராக இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக