15 ஜூன் 2011

உலக மக்களை கலங்கடித்த சிங்களக் காடையர் புரிந்த கொடூரக்காட்சிகள்!

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு மற்றும் திட்டமிட்ட படுகொலைகள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிய செய்தி ஆய்வு நேற்று (14) இரவு 11.05 மணியளவில் ஒளிபரப்பப்பட்டது.
உலகில் வாழும் மக்களை காப்பாற்றுவதற்கு என இரண்டாவது உலகப்போரின் பின்னர் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திறனற்ற தன்மையால் 40,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களை சிங்கள கடையர்கள் கூட்டமாக படுகொலை செய்யும் காட்சிகள் உலகின் பல பாகங்களிலும் உள்ள மக்களின் இதயங்களை சிதறடித்துள்ளது.
நாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்? மனித நேயம், மனித உரிமைகள், மனிதாபிமானம் என இந்த உலகம் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களுக்கு சிறீலங்காவில் என்ன நடந்தது என்ற கேள்விகளை இந்த நிகழ்ச்சியை பார்த்த பல மில்லியன் மக்கள் தமக்குள் கேட்டுக்கொண்டனர்.
யாரும் இரவு உறங்கியிருக்க மாட்டார்கள். சுயாதீன சாட்சியாளர்களை வெளியேற்றிவிட்டு தமிழ் மக்களை முற்றாக அழிப்பதற்கு சிறீலங்கா அரசு தயாரானது. அதற்கு அமைவாகவே வன்னியில் இருந்து ஐ.நா அமைப்புக்களை வெளியேறுமாறு சிறீலங்கா அரசு தெரிவித்தது.
ஆனால் அதற்கு மறுபேச்சு பேசாது அலுவலகத்தை மூடிவிட்டு ஐ.நா அதிகாரிகள் வெளியேறினார்கள். அவர்களை போக வேண்டாம் என தமிழ் மக்கள் தடுத்தனர், கெஞ்சினர், மன்றாடினர், தம்மை தனியே விட்டு செல்லவேண்டாம் என குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும், ஐ.நா அலுவலக வாசலில் குழுமி நின்று அழுதனர்.
ஆனாலும் தமது மனட்சாட்சிகளை படுகொலை செய்து புதைத்துவிட்டு ஐ.நா வெளியேறி சிறீலங்காவின் படுகொலைக்கு வழி அமைத்துக் கொடுத்தது.
அன்று ஐ.நா வாசலில் நின்று கதறிய மக்களில் பலர் இன்று உயிருடன் இல்லை.
ஐ.நாவின் இந்த நடவடிக்கைக்கு தூண்டியது யார்? இந்திய மத்திய அரசா??
இந்த இனஅழிப்புக்கு ஐ.நாவே காரணம் என அதன் கொழும்புக்கான முன்னாள் பிரதிநிதி கோடன் வைஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் தோல்வி இது எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே தனது தோல்வியில் இருந்து விடுபட, சிறீலங்கா அரசின் படுகொலைகள் தொடர்பான நீதியை தமிழ் மக்களுக்கு ஐ.நா பெற்றுத்தருமா?
சனல் போர் செய்தி ஆய்வை பார்வையிட இங்கே அழுத்தவும்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக