
ஸ்ரீலங்கா ராணுவத்தினரால் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை பற்றிய உண்மையை எடுத்துக்காட்டியதற்காக சனல் 4 தொலைக்காட்சிக்கு நாம் தலை வணங்கி எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்’ என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
நாம் பார்த்தது ஒரு துளிதான். ஊடகவியலாளர்கள் ஸ்ரீலங்காவிற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பின் தமிழினப்படுகொலையை உறுதிப்படுத்தும் மலை போன்ற சாட்சியங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்’ என்றும் அவர் சொன்னார்.
தமிழ்த் தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் இத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த வீடியோ படம் ஒன்றை வலியுறுத்துகின்றது. அதுதான் தமிழர்களின் பாதுகாப்பை ஸ்ரீலங்காத் தீவில் உறுதிப்படுத்துவது சுதந்திர தமிழீழம் ஒன்றை நிறுவுவதன் மூலம் மட்டுமே என்பதைத்தான். சுதந்திர தமிழீழம் ஒன்றை நிறுவும் வரை 1958 இனக்கலவரத்தின் பின்னர் தொடர்ந்து தமிழ் மக்கள் கொல்லப்படுவது, கற்பழிப்புக்குள்ளாக்கப்படுவது சனல் 4 மூலம் வெளிக்கொணரப்பட்டது போன்று
தொடரும்’ என்றும் உருத்திரகுமாரன் தெரிவித்தார்
பிரபல பத்திரிகையாளர் தார்ஸி வித்தாச்சி தனது 1958 இனக்கலவரம் பற்றிய புத்தகத்தில் இன உறவுகள் பற்றி ஆய்வு செய்து கேள்வி ஒன்றுடன் முடித்தார். தமிழர்களும் சிங்களவர்களும் பிரிந்து செல்வதற்கு வந்துள்ளார்களா? என்ற அந்த
கேள்விக்கு பதிலாக தமிழர்கள் 1977 பொதுத் தேர்தலில் இறைமையுள்ள சுதந்திர தமிழீழ நிறுவப்படவேண்டும் என்பதற்கு அமோகமாக ஆதரவு அளித்து வாக்களித்தனர்.
அந்த 1977 பொதுத்தேர்தல் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்பட்டது.அத்தேர்தல் ஸ்ரீலங்காவில் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே நடத்தப்பட்டது’, என்றும் அவர் தெரிவித்தார்.
1983இல் இடம்பெற்ற இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர் என்பதுடன் காடையர்கள் தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது மட்டுமல்ல சிறைச்சாலைகளில் தமிழ்க் கைதிகள் படுகொலையும் செய்யப்பட்டனர். தமிழர்களுக்கு சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு இல்லை என்பதை அது உறுதிப்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக