14 ஜூன் 2011

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று 13.06.2011 அன்று சென்னை ஐகோர்ட்டில் வைகோ நேரில் ஆஜராகி வலியுறுத்தினார்.
பின்னர் ஐகோர்ட்டில் இருந்து வெளியே வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி நாங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்காக ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டிருப்பது, எங்களுக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றியாகும். இந்த தடையை நீக்கக்கோரி தொடர்ந்து முயற்சி செய்வோம். தடை நீக்கப்படும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், போர்குற்றங்களுக்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச அளவில் விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.
ஆனால் தேர்தல் முடிவு வெளியான உடனேயே, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், இலங்கையில் நடந்த போர்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும், இந்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக