27 ஜூன் 2011

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் இன்னும் முடியவில்லையாம்.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவு பெற்றுவிட்டது என எண்ணிவிடக் கூடாது, ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு சதிகளை மேற்கொண்டுவருகிறது என மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
ஒரு யுத்தம் முடிவு பெற்றாலும் சர்வதேசத்தி லிருந்து வரும் மற்றுமொரு யுத்தத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மொனராகலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற படைவீரர்களுக்கான வீடுகள் கையளிப்பு தேசிய வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சம்பளம் கொடுப்பனவு என எதனையும் பார்க்காமல் நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்களே முப்படைவீரர்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தகைய படைவீரர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அவர்களுக்கான வீடமைப்பு உட்பட சகல வசதிகளிலும் கவனம் செலுத்துமாறு பணிப் புரைகளை விடுத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக