
இலங்கை அரசு போர்க்குற்றங்களை செய்துள்ளது என மனித உரிமை பேரவை கூட்டத்தில் உறுதிப்படுத்துவதற்காக 30 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும், இரண்டு ஊடக நிறுவனங்களும் சர்வதேச புத்திஜீவிகள் என கூறும் 10 பேரும் மனித உரிமை பேரவை கூட்டத்தில் மிகவும் இரகசியமான முறையில் சூழ்ச்சியொன்றை ஆரம்பித்திருப்பதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த ஆவணப்படம் குறித்து பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு இலங்கை அரசு விடுத்த கோரிக்ககை நிராகரிக்கப்பட்டதாகவும், கையடக்க தொலைபேசிகளில் இந்த போர்க்கூற்ற காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அந்த காட்சிகள் வீடியோ கமெரா ஒன்றினால் படம்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தியவின தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக