17 ஜூன் 2011

நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் தேசிய இரகசிய பிரிவினரிடம்.

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 38 பேர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர் . இந்த நிலையில் இலங்கை வந்துள்ள எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை வந்துள்ள 38 தமிழர்களும் விசாரணைக்கென தேசிய இரகசிய விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடிகயல்வு திணைக்களக் கட்டுப்பாட்டார்ள் வூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பிரித்தானியாவில் இருந்து 28 பேரே நாடு கடத்தப்படவுள்ளதாக தமக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 38 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக