25 ஜூன் 2011

இலங்கையின் கொலைக்களங்கள்"காணொளியை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பிரித்தானிய மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தும் “இலங்கையின் கொலைக்களங்கள்” என்ற ஆவணப்படம் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆவணப்படத்தை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 14 ஆம் திகதி ஒளிபரப்பியிருந்தது. இந்த ஆவணப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி மூலம் பிரித்தானியாவில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
அதேவேளை உலகம் முழுவதிலும் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 2 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ஆவணப்படத்தை காணொளிப் பதிவு மூலம் பார்வையிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இந்த ஆவணப்படம் அனைத்துலக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் திரையிடப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் இந்த ஆவணப்படம் இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, ஜேர்மனி, நியூசிலாந்து, அயர்லாந்து, கிழக்குத்திமோர் உள்ளிட்ட பல நாடுகளின் ஐ.நாவுக்கான தூதரகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இதனை பார்வையிட்டிருந்தனர். அதேவேளை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையிலும் கடந்த புதன்கிழமை இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக