24 ஜூன் 2011

தமிழின அழிப்புக்கு துணை போகும் தமிழ் பெண் மருத்துவர்.

இச் செய்தியை வாசித்தால் நரம்புகள் நடுங்கும் ! நாளங்கள் ஆடி விடும் ! யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதியில் போரினால் பதிக்கப்பட்ட பல பெண்களையும் சிறுமிகளையும் வேலை தருவதாகக் கூறி, தென்னிலங்கை அழைத்து வரும் ஒரு கும்பல், அவர்களை பாலியல் தொழிலில் பலாத்காரமாக ஈடுபடவைக்கிறது. பொய் சொல்லி இவ்வாறு தென்னிலங்கை அழைத்து வரும் தமிழ் பெண்களை அடைத்து வைத்து அவர்களை சிங்கள காமவெறியர்களுக்கும் பணக்கார முதலைகளுக்கும் தாரைவார்ப்பதையே இவர்கள் செய்துவருகின்றனர். இதனைக் கூட ஒருவகையில் மன்னிக்கலாம் ஆனால் இலங்கை தனியார் வைத்தியசாலைகளில் நடக்கும் அட்டூளியங்கள் தான் தலைவிரித்தாடுகிறது !
சமீபத்தில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி வன்னியில் இருந்து அழைத்துவரப்பட்ட 16 வயதுச் சிறுமி ஒருவர் தென்னிலங்கையில் விடுதி ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒட்டுக்குழுவினர், அவர் நிலந்தரமாக கர்ப்பம் தரிக்ககூடாது என்பதற்காக வைத்தியசாலை கொண்டுசென்றுள்ளனர். இச் சிறுமியின் கர்பப்பையை அகற்றுமாறு அவர்கள் வைத்தியரிடம் கூறியும் உள்ளனர். கொழும்பில் உள்ள ஒரு பிரபல வைத்தியசாலை தாதியான வித்தியா கந்தசாமி என்றவர் இந்த அறுவை சிகிச்சைக்கு உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு தமிழ் பெண் ஆவார்.
தனக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதை அறிந்த 16 வயதுச் சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற சிறுமி கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்ததை அடுத்து, பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தியுள்ளனர் என அறியப்படுகிறது. இதனையடுத்து, நீதிமன்றம் சிறுமியை சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த சிறுமி வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே பொலிசார் மேலும் சில விடுதியில் தேடுதல் நடத்தி, அங்கு சிக்கியிருந்த யுவதிகளை மீட்டுள்ளனர் எனவும் மேற்படி யுவதியின் கற்பப்பையை அகற்ற முன்வநதவர் ஒரு தாதியென்பதும் அவரது பெயர் வித்தியா கந்தசாமி எனவும் புகைப்பட ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக