06 ஜூன் 2011

ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கான போட்டியில் மீண்டும் பான் கீ மூன்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், தனது இரண்டாவது தவணை பதவிக் காலத்திற்கு போட்டியிடுவது குறித்து இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்து பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
66 வயதான தென்கொரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூன் தவிர்ந்த வேறு யாரும் இப்பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் எதுவும் பான் கீ மூனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் அவர் மீண்டும் 5 வருட காலத்திற்கு இப்பபதவிக்கு தெரிவாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் தற்போதைய பதவிக்காலம் இவ்வருடம் டிசெம்பர் 31 ஆம் திகதி முடிவடையகிறது. எனினும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளான பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகியன இத்தேர்தல் நடவடிக்கைகள் துரிதமாக கையாளப்படுவதை விரும்புகின்றன.
நாளை ஆசிய நாடுகளுடனான சந்திப்பொன்றின்போது தான் மீண்டும் போட்டியிடுவதை பான் கீ மூன் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் செய்தியாளர் மாநாடொன்றை அவர் நடத்தவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக