27 ஜூன் 2011

மெரீனாவில் கூடிய பல்லாயிரக் கணக்கான மக்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 26-வது நாளை உலககெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா. சபை கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் இலங்கை ராணுவத்தின் பிடியில் சிக்கி, சித்ரவதைக்கு உள்ளாகி உயிர் இழந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீர சந்தானம், மே 17 இயக்கம் திருமுருகன், ம.தி.மு.க., மற்றும் சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வை தொடர்ந்து பேசிய பழ.நெடுமாறன், "இலங்கை தமிழர்களுக்கு தமிழ் ஈழம் பெற்று தர தான் இங்கே கூடியிருக்கிறோம். இந்த ஒற்றுமை, ஒன்றுப்பட்டால் நம்மால் நம்முடைய எண்ணத்தை அடைய முடியும். அதற்கு இந்த நிகழ்வு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக