30 ஜூன் 2011

தமிழர்கள் ஏமாறப் பிறந்தவர்கள் இல்லை.பொய்லி காட்டம்.

இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் செயல்களுக்கு உடனடி விசாரணை நடத்தவேண்டும் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பேராசிரியர் பொய்லி, இலங்கை அரசாங்கம் எதுவித விசாரணையை நடத்தவோ, யாரையேனும் குற்றவாளியாக நிரூபிக்கவோ தனக்கு உத்தேசமில்லை என்பதை தெளிவாகக் காட்டிவிட்டது. தொடர்ந்தும் தான் அழித்துவரும் தமிழர்களுடன் அரசியல் சமரசம் செய்ய மட்டுமே அது விரும்புகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வன்னியில் 40000 க்கும் மேற்பட்ட தழிழர்களை அழித்த இலங்கை அரசை விசாரிப்பதற்கென சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐ,நா செயலாளருக்கு அழுத்தம் கொடுக்கும் காலத்தை ஒபாமா அரசு இப்போது கடந்து விட்டது. இவ்வாறு ஒரு ஆணைக்குழு அமைத்தால், இலங்கையில் நடக்கும் இன அழிப்பை நிறுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியைக்கூட அனுப்பக்கூடும் என்றும் அவர் தனது கருத்தில் கூறியுள்ளார்.
இல்லையெனில், அமெரிக்காவின் கொள்கையானது இதுவொரு நகைச்சுவை, ஒரு மோசடி, ஏமாற்றல் மற்றும் பிரச்சாரம் என்று தாமே நிரூபிக்கும்.தமிழர்கள் ஏமாற பிறந்த குழந்தைகள் இல்லை என்று தெரிவித்துள்ளார் பொய்லி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக