25 ஜூன் 2011

ஸ்ரீலங்காவிற்கு எதிராக சர்வதேச மன்னிப்புச்சபை வழக்கு.

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக போர் குற்றம் தொடர்பில் வழக்கொன்றை தாக்கல் செய்யும் முனைப்புகளை மேற்கொண்டு வருகிறது. கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய, கனேடிய மன்னிப்புச் சபையின் தலைவர் ஜோன் ஆக்ரட், பிரித்தானியா, சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணிகளை கொண்டு, இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில், ஸ்கைப் மூலம் தொடர்புக்கொண்ட ஜெர்மனியில் இயங்கும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் தலைவர், செனல் 4 தொலைக்காட்சிக்கு வீடியோ படங்களை தாமே வழங்கியதாக கூறியுள்ளார்.
தமது அமைப்பை சேர்ந்த 22 பேர் வெளிநாடுகளில் இருப்பதாகவும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
செனல் 4 தொலைக்காட்சிக்கு வீடியோ காட்சிகளை வழங்கிய இந்த நபருக்கு ஜெர்மனி அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளதாக தூதரக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக