25 ஜூன் 2011

இலங்கைப் படைகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சனல் போர்வுடன் இணைந்து இலங்கையர்கள் செயற்படுகின்றனர் என்கிறது சிங்கள நாளிதழ்.

செனல் 4 தொலைக்காட்சியுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்படும் 5 நாடுகளில் உள்ள 22 இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.
இந்த இலங்கையர்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் சிலவற்றின் உதவியுடன் வெளிநாடுகளுக்கு சென்று அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, சுவிஸர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவர்கள் வசித்து வருகின்றனர் என்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து, இந்த இலங்கையர்கள், இலங்கை இராணுவத்திற்கு அவதூறு ஏற்படுத்துவதற்காக செனல் 4 தொலைக்காட்சியுடன் இணைந்து செயற்படுவதாக தெரியவந்துள்ளது. அதேவேளை இந்த குழுவை வழிநடத்துபவர் யார் என்பது குறித்தும் கண்டறியப்பட்டுள்ளது எனவும் திவயின கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக