
இந்த ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்ட மீறல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை எனவும் இது தொடர்பில் கட்டாயம் விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் ஏனைய சர்வதேச சமூகங்களுடன் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு திருப்பி அனுப்பவென 40 தமிழர்கள் பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுயள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படக் கூடாதென வலியுறுத்தி சனல் 4 ஒரு ஆவணத்தை தயாரித்து காணொளி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக