20 ஜூன் 2011

கனிமொழியின் இருப்பிடமானது திகார் சிறை.பிணை மனுவை உச்ச நீதிமன்றமும் நிராகரித்தது.

2- G -ஸ்பெக்டரம் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்த கனிமொழியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று காலை முதலே டில்லியில் இந்த வழக்கு தொடர்பான பரபரப்பு நிலவி வந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றமும் நிராகரித்து விட்டது. இனி நீதிமன்ற விசாரணைகள் முடியும் வரை கனிமொழி திஹார் சிறையில் இருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகளே இல்லை. நீதிமன்ற விசாரணையை விரைந்து நடத்தக் கோருவதன் மூலமே நீதிமன்ற விசாரணைகள் முடிந்த பின்னரே இந்த வழக்கில் கைதாகியுள்ளவர்கள் இனி ஜாமீன் பெற முடியும்.
கனிமொழிக்கு இறுதி வாய்ப்பாக அமைந்த உச்ச நீதிமன்றமும் ஜாமீனை நிராகரித்து விட்ட நிலையில் டில்லியிலும் தமிழகத்திலும் திமுக, காங்கிரஸ் தரப்பினரிடையே வருத்தம் கலந்த பதட்டம் நிலவுகிறது. உச்ச நீதிமன்றமும் ஜாமீன் மனுவை நிராகரித்து விட்ட நிலையில் திமுகவின் செயற்குழுவை கூட்ட கலைஞர் கருணாநிதி முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இறுதியாகக் கிடைத்த தகவலின் படி மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு ஜாமீன் மனுவை தாக்கல் செய்யும் உரிமை கனிமொழிக்கு உண்டு என்று டில்லி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக