07 ஜூன் 2011

அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து தமிழ் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அண்மையில் சிறீலங்காவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க தூதரக படைத்துறை அதிகாரி நீதித்துறையில் மேற்கொள்ள முயற்சித்த குழப்பங்கள் மூலம் அமெரிக்காவின் இரட்டை வேடம் கலைந்துள்ளதாக இலிநோயிஸ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் பிரான்சிஸ் பொயில்ட் தெரிவித்துள்ளார்.
தமிழ்நெற் இணையத்தளத்திற்கு இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
லெப். கேணல் லாறி ஸ்மித்தின் கருத்தின் பின்னனியில் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனே இயங்கியுள்ளது. சிறீலங்காவில் அழைப்பை அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களம் நிராகரித்துள்ளபோதும், பென்ரகனின் அனுமதியுடன் ஸ்மித் மாநாட்டில் பங்குபற்றியுள்ளார்.
உத்தியோகபூர்வமாக பங்குபற்றிய அவரின் கருத்துக்களும் உத்தியோகபூர்வமானவையே பென்ரகனின் கருத்தையே அவர் அங்கு வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அவரின் கருத்து தனிப்பட்டது என அமெரிக்காவின் வெளியுறவுத்திணைக்களம் மறுத்துள்ளது.
விடுதலைப்புலிகளின் சரணடைவு நடவடிக்கைகளை சந்தேகிப்பதன் மூலம் சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை வலுவிழக்கச் செய்ய அவர் முற்பட்டுள்ளார். இது ஒரு இரட்டை நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகின்றது. எனவே தமிழ் மக்கள் அமெரிக்காவின் இந்த அணுகுமுறை தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக