29 ஜூன் 2011

சனல்போர் மீது குற்றம் சுமத்தும் பேரினவாத சிங்களவர்.

ஊடக நெறிமுறைகளை முழுமையாக மீறி, புலிகளின் கொடூரமான செயற்பாடுகளை மூடி மறைத்தமை தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி சேவைக்கு தண்டனை வழங்குமாறு கோரி, லண்டனில் உள்ள சிங்களவரான எஸ்.டி.சில்வா, பிரித்தானிய தொலைக்காட்சி சேவைகள் தொடர்பான பெறுப்பு கூறும் நிறுவனமான ஒப்கோம் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
செனல் 4 தொலைக்காட்சி விடுதலைப்புலிகளிடம் நிதி உதவியை பெற்றே இலங்கைக்கு எதிராக திரைப்படத்தை தயாரித்துள்ளதாகவும் இலங்கை இராணுவத்தினரால் காப்பற்றப்பட்ட தமிழர்கள் குறித்து செனல் 4 செவ்விகளை ஒளிப்பரப்பவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் சில்வா என்ற பேரினவாத சிங்களவர் கூறியுள்ளார் எனவும் தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக