06 மே 2010

யாழ் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்!







யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், அங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:சம்பந்தப்பட்ட எட்டு அரசியல் கைதிகளின் கூடத்தின் ஜன்னல் கம்பிகள் கடந்த 30 ஆம் திகதி விலக்கப்பட்டு இருந்தது. அதனை அவதானித்த சிறைக் காவலர்கள இவர்கள் தப்பிப்பதற்காகவே கம்பிகளை விலக்கியதாக நினைத்துக் கைதிகளைத் தாக்கியுள்ளனர்.நிர்வாணமாக வைத்து மிக மோசமான முறையில் தாக்கப்பட்ட கைதிகள் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு கை முறிந்தும், மற்றும் சிலருக்கு சிறுநீரூடன் இரத்தமும் வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலையிலிருந்து மாலை வரை இவர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தமிழ் சிறைச்சாலை அதிகாரிகளே என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக