27 மே 2010

நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பாக பிரச்சாரம்,மட்டக்களப்பில் இருவர் கைது.



நாடு கடந்த தமிழீழம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் பிரசாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாண்டிருப்பு மற்றும் எருவில் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் இருவரும் நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும்படி மக்களிடம் பிரசாரம் செய்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில் விடுதலைப் புலிகளின் பிரசார வீடியோக்கள் காணப்பட்டதாகவும் இவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக