17 மே 2010

ஈழத்தமிழர்களை காக்கத் தவறியதால் தான்,செம்மொழி மாநாட்டை நிராகரித்தேன்.-ராமசாமி.


மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி நாளை நடக்கவிருக்கும் நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் கலந்துகொள்ள மதுரை வந்துள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம், ‘’மலேசிய கடலில் 75 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டு, முகாம்களில் உள்ளனர். இவர்களை இலங்கைக்கு அனுப்பினால், பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவர். அந்த நிலைக்கு ஆளாகக்கூடாது என போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மொரிஷீயஸ் உட்பட பல நாடுகளில் தமிழர்களின் சமூக, பொருளாதார நிலை மோசமாக உள்ளது. இந்திய அரசு எங்களுக்கு குரல் கொடுக்கவில்லை. இந்திய அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்திய மக்கள் மீது நம்பிக்கை உண்டு.
மலேசிய தமிழர்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. புலம் பெயர்ந்த தமிழர்கள் மாநாடு டெல்லியில் நடந்தபோதும், தற்போது உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கும் வந்த அழைப்பை நிராகரித்துவிட்டேன்.
காரணம், இலங்கை தமிழர்களை இந்திய மற்றும் தமிழக அரசுகள் காப்பாற்றாமல் கண்களை மூடிக்கொண்டிருந்தன. அதனால்தான் நிராகரித்தேன்’’என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக