21 மே 2010

மக்களவையின் அனைத்துலக செயலகம் விடுக்கும் அவசர அவசிய வேண்டுகோள்!

அன்பான தமிழீழ மக்களே! முள்ளிவாய்காலின் மனிதப்படுகொலைகள் ஓராண்டுகள் எட்டிவிட்டன. ஆனால் கொலையை செய்தவனும், கட்டளையிட்டவனும் எக்காளம் இட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் நாமோ எமது உறவுகளை பறிகொடுத்தும், பலிகொடுத்தும் அவர்களுக்கான எதையும் நீதியின் முன்னால் நிறுத்த நாம் முன்வரவில்லை. எமது மக்களுக்கு நீதி வேண்டியும், நியாயம் கேட்டும் உலகம் முழுவதும், தாம் வாழும் நாடுகளிலும் அதை நீதிமன்றங்களில் வழக்கை பதிவு செய்தும், யுத்தத்தாலும், இப்பெயர்வாலும் மற்றும் அனைத்து இராணுவநடவடிக்கையாலும் உயிரை இழந்து, அங்கீவீனமாக்கப்பட்டவர்,காணாமல் போனோர், மனவுழைச்சலுக்குள்ளானவர்கள் போன்றோரின் விபரங்கள், தகவல்களை ஆதாரங்களுடன் எதிர்பார்க்கின்றோம். ( உங்கள் அனைத்து தகவல்களும் இரகசியம் பேணப்படும் என்பது உறுதி )
இவை சம்பந்தமான துரிதநடவடிக்கை எடுப்பதற்கு சட்டவாளர்களும், மனதவுரிமை அமைப்புக்கள், சர்வதேச பிரசித்தி பெற்ற ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் முன்வந்திருக்கும் வேளை நாம் வாழாதிருப்பது எமது இனத்திற்கும், உயிரைப்பறிகொடுத்த அப்பாவி உயிர்களுக்கு செய்யும் நன்றியற்ற தொரு விடயமாகும். எனவே நாம் துரிதகதியில் இந்த செயற்பாட்டிற்கு துணைநிற்போமாக மேலதிக விடயங்களுக்கு உங்கள் நாட்டில் உள்ள தமிழ்மக்கள் பேரவையுடன் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது எங்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்பு: 06 15 88 42 21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக