18 மே 2010

கொழும்பு துறைமுகத்தில் இரசாயன கொள்கலனில் தீ!



கொழும்பு துறைமுகத்தில் இன்று இரவு 8 மணியளவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரசாயன கொள்கலன் ஒன்று தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் பின்புறமாக உள்ள துறைமுகப்பகுதியிலேயே இந்த கொள்கலனில் தீப்பற்றியுள்ளது.
இதன் காரணமாக, அந்தப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தீப்பற்றிய ரசாயன கொள்கலனில் இருந்து இரசாயன பதார்த்தம் என்ன என்பது இதுவரை தெரியவரவில்லை.
இந்தநிலையில், சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் வைத்தியரை நாடுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக