08 மே 2010

சிறிலங்கா அரசால் அனுப்பப்பட்ட ஒன்பது தமிழர்கள் இத்தாலிய பொலிசாரால் கைது!


இத்தாலியில் வைத்து 9 இலங்கைத் தமிழர்களை இத்தாலியப் பொலிசார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை அரசின் அனுசரணையுடன் ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன?
எனினும் இந்தத் திட்டம் என்ன என்பது குறித்து தமக்கு இத்தாலியில் வைத்தே அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அறிய வருகிறது.

புலம் பெயர் தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளை முறியடிப்பதற்கும் அதற்கேற்ற வகையில் இவர்கள் மூலமாக வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டங்களும் தீட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தாம் எப்படியாவது முறியடிப்போம் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்திருந்த நிலையில் இவவாறான குழுவொன்று புலம் பெயர்தேசத்தில் கைதாகியிருப்பதானது இலங்கை அரசை சர்வதேச மட்டத்தில் மேலும் நெருக்கடிக்கு ஊள்ளாக்குமென எதிர்வு கூறப்படுகிறது.

இவ்வாறு இத்தாலியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களின பெயர் விபரம்.

அருமைநாதன் கிருஷ்ணஜெகன் (22) ‐ சாவகச்சேரி

பாக்குலகிருஷ்ணா கோபாலகிருஷ்ணன் (20) சாவகச்சேரி.

கஜிதா ரஞ்சிதநாதன் (23) யாழப்பாணம்.

சிவநேஸ்வரன் கோகிலதாஸ் (31) காரைநகர்.

தர்மகஜனி சிறிதரன் (26) யாழ்ப்பாணம்.

ஸ்டெலின்ராசா துஷ்யந்தன் (29) யாழ்ப்பாணம்.

தர்மகுலசிங்கம் துஷ்யந்தன் (24) மானிப்பாய்.

எட்வட் யேசு ஜெய்சன் (27) மன்னார்‐ பேசாலை.

நந்தகுமார் உதயபுத்திரன் (25) உடுவில்

ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களை இத்தாலிய இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் கிருஷ்ணன் என்பவர் இவர்களை சந்தித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக