10 மே 2010

பார்வதி அம்மா இலங்கை சென்றடைந்துள்ளார்.-சிவாஜிலிங்கம்.


மலேசியாவில் தங்கியிருப்பதற்கான விசா முடிவடையும் காரணத்தால் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை இலங்கைக்கு அழைத்துச் சென்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் குளோபல் தமிழச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கை நேரம் மாலை 5.30ற்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தை தாம் சென்றடைந்ததாக தெரிவித்துள்ள சிவாஜிலிங்கம் பார்வதி அம்மாளின் மருத்துவ சிகிச்சை யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரில் மேற்கொள்ளப்படலாம் எனவும் எனினும் இது குறித்து அவரது பிள்ளைகளும் குடும்ப உறுப்பினர்களுமே முடிவெடுப்பார்கள் எனவும் ஜீ.ரீ.என்னிற்குத் தெரிவித்துள்ளார். இன்று இந்திய மத்திய அரசு விடுத்த அறிக்கை மற்றும் தமிழ்மாநில அரசும் முதல்வர் கருணாநிதியும் விடுத்த அறிக்கை குறித்து ஜீ.ரீ.என் வினவிய போது அதுபற்றி எதுவும் குறிப்பிடுவதற்கில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக