09 மே 2010

மகிந்தவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் திஷ்ஷநாயகம் எங்கே?



ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகம், எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திஸ்ஸநாயகத்தின் தந்தையாரை இது தொடர்பில் கேட்டபோது, திஸ்ஸநாயகம் தம்முடன் தங்கியிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். அவரை நீண்ட நாளாக தாம் காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸநாயகத்தின் சட்டத்தரணிகளும் இது தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க மறுத்துவருகின்றனர்.
இந்தநிலையில் அவர் பாதுகாப்புடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திஸ்ஸநாயகத்தின் மனைவி ரொனாட் தற்போது வெளிநாடு ஒன்றில் இருக்கும் நிலையில் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வார நாடாளுமன்ற அமர்வின் போது கருத்துரைத்த உறுப்பினர்கள் பலரும் திஸ்ஸநாயகத்திற்கு காலம் தாழ்த்தியே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
திஸ்ஸநாயகம், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆகஸ்ட் 31 ஆம் திகதி 20 வருட கடுழிய சிறைத்தண்டனைக்கு ஆளானார்.
எனினும் மேன்முறையீட்டின் கீழ் பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக