28 மே 2010

இலங்கை தூதரகத்திடம் விளக்கம் கோருகிறது இன்ன சிற்றி பிரஸ்.



இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்தது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் விளக்கம் கோரி, ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதிக்கப்பட்ட பத்திரிகையான இன்னர் சிற்றி பிரஸ், இலங்கை தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக்குற்றச் சாட்டுகளுக்கான விளக்கங்களையும் இன்னர் சிற்றி பிரஸ் கோரியுள்ளது.
இதேவேளை, அண்மையில் பான் கீ மூனுக்கும் ஜீ.எல்.பீரிஸிக்கும் இடையிலான சந்திப்பின் போது, இன்னர் சிற்றி பிரஸ் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன ஆகியோர் கலந்து கொண்டனர்.
எனினும் இதன் போது புகைப்படம் எடுக்கவோ, கலந்து கொள்ளவோ இன்னர் சிற்றி பிரஸிற்கு அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக