27 மே 2010

இலங்கை அமைச்சருக்கு எதிராக திருச்சியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!



இலங்கை ராணுவ மந்திரியைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்.நாம் தமிழர் இயக்கத்தவர் 50 பேர் திருச்சியில் கைது.
தமிழ் இனத்தை கொன்றொழித்த சிங்கள ராணுவ மந்திரி தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணிக்கு உல்லாசப்பயணமாகவும் தனது பாவத்தை கழுவுவதற்காகவும் இன்று வருகை தரத் திட்டமிட்டிருந்தான்.
இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வந்த அவர் வருகையை எதிர்த்து நாம் தமிழர் இயக்கம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.
அதன்படி இன்று காலை விமான நிலையம் எதிரே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது.இதனால் இன்று வருகை புரிந்த சிங்கள ராணுவ அமைச்சர் திருச்சி விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் வெளிவரமுடியாமல் தவித்தார்.
இதனை அடுத்து நாம் தமிழர் இயக்கத்தவர் பிரபு,ஜெயந்தி,ஜெயதேவன் உட்பட நாம் தமிழர் இயக்க தோழர்கள் 50 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக