16 மே 2010

பார்வதி அம்மாள் காலைத்தொட்டு வணங்கும் சிங்கள செய்தியாளர்கள்!


மலேசியாவில் தங்கும் அனுமதி முடிந்து, தமிழம் வரமுடியாமல் கொழும்பு சென்ற பார்வதி அம்மாள் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டு, வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், யாழ்ப்பாணம் வரும் பல சிங்கள செய்தியாளர்கள் பார்வதி அம்மாளை வந்து பார்ப்பதுடன் அவரது காலைத் தொட்டு வணங்கி செல்வதாக அங்கிருக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரபாகரனைப் பெற்றத் தாய்க்கு சிங்களவனும் மதிப்பளிப்பது பெருமைக்குறிய விசயம் என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக