20 மே 2010

நாம் தமிழர் இயக்க ஆதரவாளர் விபத்தில் சாவு!





மதுரையில் கடந்த மே 18 இல் நடைபெற்ற நாம் தமிழர் அரசியல் கட்சி மாநாட்டுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தவர்களின் வாகனம் விபத்தில் சிக்கியத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
நாம் தமிழர் அரசியல் கட்சி மாநாடு முடிந்து சென்னை திரும்பிச் சென்ற பேருந்து ஒன்று 19.5.2010 அன்று அதிகாலை 3 மணியளவில் திருச்சி அருகே விபத்துக்குள்ளாகியது . அதில் பயணம் செய்த தண்டையார்பேட்டை ஆறுமுகம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதி நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் நடந்தது அதில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதியமான், பேராசிரியர் தீரன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக