11 மே 2010

அமிதாப் வீட்டின் முன் சாகும்வரை போராட்டம்,நாம் தமிழர் இயக்கம் அறிவிப்பு!


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டின் முன்பாக நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பல நூறுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் நாளை காலை 10 மணி முதல் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்துகின்றனர்.
வெகு விரைவில் IIFA விருது வழங்கும் விழா சிறிலங்காவில் நடக்க இருக்கிறது. சிறிலங்கா தனது போர் குற்றங்களை சர்வதேச பார்வை இல் இருந்து மறைக்கும் முகமாக இந்தியாவின் கூட்டு சதியில் இந்த நிகழ்வு நடை பெற உள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவிற்கு நடிகர் அமிதாப் தான் விசேட தூதுவராக செயல் படுகிறார். ஏற்கனவே நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற அமிதாப் வீடு முற்றுகை போராட்டத்தின் விளைவாக நமக்கு சாதகமான சில செய்திகள் வந்த போதும், அண்மையில் சிங்கள அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சிறீலங்காவில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் IIFA விருது வழங்கும் விழாவை இலங்கையில் நடத்த மாட்டோம் என அறிவிக்க வலியுறித்தி நாம் தமிழர் இயக்கத்தால் இந்த போராட்டம் முன்னெடுக்க படுகின்றது.மும்பை தமிழர்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள கட்சி, இயக்கங்களை மறந்து தமிழராய் ஒன்றுகூடி இப்போராட்டத்தை வென்று எடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என நாம் தமிழர் இயக்கத்தின் மும்பை கிளை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன்,அர்ஜூன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக